Saturday, November 14, 2015

எண்ணச்சிதறல்கள் - நவம்பர் 14 (சனிக்கிழமை).

சம்பந்தமே இல்லாமல் 'கண்டாங்கி, கண்டாங்கி'!

விஜய் டீவியில் 'துப்பாக்கி'! கிளைமாக்ஸ் - விஜய் வில்லனை சந்திக்கப்போகும் காட்சி.



நான் புத்திசாலித்தனமாய், "என்ன சம்பந்தமே இல்லாமல், முருகதாஸ் 'கண்டாங்கி, கண்டாங்கி' பாட்டை இங்க வச்சிருக்கார்?"

முறைத்துப்பார்த்த மனைவி,"நல்லா பாருங்க! இது சன் ம்யூசிக். ஜில்லா பட பாட்டு! விளம்பர இடைவெளியின் போது மாத்திட்டேன்"

* * * * * * * * *

சென்னை 'செல்ஃபி' மெட்ரோ



சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவர்கள் பெரும்பாலானோர், 'செல்ஃபி புள்ள' !எடுத்துத்தள்ளிவிடுகிறார்கள்! அதில் ஒரு சிறுவன், ரயில் பெட்டிகளின் இன்டீரியரை மட்டும் வளைச்சு வளைச்சு எடுத்துக்கொண்டிருந்தான். எதிர்காலத்தில், ரயில் பெட்டிகளை டிசைன் டிசைனா செய்வான் போலிருக்கிறது!!!

ஒரு சமீபத்திய சர்வேயில், பெரும்பாலானோர் மெட்ரோவில் பயணம் செய்வது, பொழுதுபோக்கிற்காகவும் செல்ஃபிக்காகவும் தான்.

அட பக்கிபயலுவளா இதை தெரிஞ்சுக்கிறதுக்கு சர்வே எதுக்கு?

* * * * * * * * *

திகிலூட்டும் கேள்வி!

ஒரு உணவுப்பொருள் காலாவதியானால் என்ன செய்வோம்? தூக்கிப்போடுவோம், இல்லையா ! 

ஆனால், நாம் வழக்கமாக பொருட்கள் வாங்கும் சூப்பர் மார்க்கெட்-களில் அப்படி செய்யமாட்டார்கள். ரிட்டர்ன் கொடுத்துவிடுவார்கள். எதற்காக என்றெல்லாம் சொல்லமாட்டார்கள். ரிட்டர்ன் ஆன காலாவதியான உணவுப்பொருளை என்ன செய்வார்கள் என்பது உற்பத்தியாளர்களுக்குத்தான் வெளிச்சம்!



அப்புறம், இந்த பதப்படுத்திய உணவுகள்! சைவ அசைவ உணவு எதுவாகயிருந்தாலும் எவ்வளவு நாட்களானாலும் பதப்படுத்தி, பத்திரப்படுத்தி வைக்கமுடியும்.

30 வருடங்களுக்கு முன் பதப்படுத்திய Frozen Chicken-னை சமைத்து ஃப்ரேஷ்-ஆக பரிமாறமுடியும் என்ற உண்மை தெரியுமா உங்களுக்கு?

* * * * * * * * *

காக்காமுட்டை - "எடுத்துக்கிறோம்!" என்பது சரியா?!!


காக்காமுட்டை படத்தில், திருடுவதை "எடுத்துக்கிறோம்" என்று சொல்வது சரியா???!! ரயில் ஃபுட்போர்டில் போகிறவர்களின் செல்போன்களை பறிப்பதும் "எடுத்துக்கொள்வதுதானே"! இப்படியே போனால், பெரிய பெரிய ஸ்கேம்(Scam)களில் மாட்டியவர்களின் மீதும் "பாவம் எடுத்துதானே கொண்டார்கள்" என்று பரிதாபம் உண்டாகிறது!

ஐயகோ என்ன இது ! என் மைன்டு அவனுக்கு ஃபிரெண்டு ஆகிடுச்சே ! 

* * * * * * *

சங்கதாரா.. புத்தகவிமர்சனமல்ல!!!



கரிகாலன் கொலை பற்றிய சிந்தனைகளை வேறொரு பரிமாணத்திற்க்கு இட்டுச்செல்கின்றது இந்த புதினம். தக்க சான்றுகளுடன் ஒவ்வொரு நிகழ்வுகளையும் குறிப்பிட தவறவில்லை நாவலாசிரியர்.

இருப்பினும், அதி முக்கியமான இறுதி அத்தியாயங்களில் இடம்பெறும் தகவல்களை எங்கிருந்து பெற்றார் என்ற சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லை..

மிக முக்கியமாக, ஆதித்யனை கொன்றவரைப் பற்றிய தகவல், இராஜராஜனின் பிறப்பு ரகசியம், உத்தமசோழன் உண்மையில் யார் என்ற விளக்கம், வந்தியத்தேவனின் உண்மையான நோக்கம் என்ன என்பது. சர்ச்சைகளையும் ஐயங்களையும் உருவாக்கும் இந்தப்பகுதிகளில் தான் சான்றுகள் இன்றி எழுதப்பட்டிருக்கிறது.

இந்த மூன்று விஷயங்களுக்கும் விடை தெரிந்தபின், ஒரு நிம்மதியின்மை தோன்றுகிறது. அதற்காகத்தான் கல்கி மறைத்தாரா ???!!!

* * * * * * *

இரண்டும் ஒன்றா?

”கண்ணுக்குள் பொத்திவைப்பேன்.. “



சாருலதாமணி, சாதனா சர்கம் - இவர்களின் குரல்களில் இனிமையான பாடல்! நஸ்ரியாவின் குழந்தைத்தனமான எக்ஸ்பிரஷன்கள் அருமை. வாண்டூஸ்க்கெல்லாம் பிடிக்கிற மாதிரி டான்ஸ் பொம்மைகள் ஆடைகள்!

சாதனா சர்கமே பாடியிருப்பதால் எனக்கு இன்னொரு பாடலும் ஞாபகத்திற்கு வருகிறது. இரண்டும் ஒரே ராகமோ?

“ரகசியமாய்!”


* * * * * * *

நானொரு கவிஞன் ஒரு காலத்திலே!

மாணவர் பிராயத்தில் நிறைய கவிதைகள் எழுதுவேன். சிற்சில பரிசுகள், கல்லூரி காலம் வரை என்னை வளர்ந்து வரும் கவிஞனாக இட்டுச்சென்றன. அதற்குப்பின் ஏனோ தெரியவில்லை 'பற்றாத சட்டையை இழப்பது போல' கவிதை எழுதும் பழக்கம் என்னை விட்டுபோய்விட்டது.

ஏன் என ஆராய்ந்ததில் புரிந்தது - அழகிய மொழியில் ஆங்கில கலக்காமல் சாதாரணமாக எழுதுவதே தரமான கவிதை எழுதும் மகிழ்வை தந்ததாலேயே கவிதை எழுதிவரும் வழக்கத்தை இழந்திருக்கின்றேன்!


ஒரு கவிதை - கீழே (நல்லாயிருக்கா?)

* “கிளையினிலிருந்து
    உதிரும்
    பூக்களுக்காக
    வருந்துவதா..?
    அது என்மேல்
    உதிர்வதனால்
    மகிழ்வதா..?”


* * * * * * *

என்னம்மா இப்படி பண்றீங்களேமா ?

எந்த ஊடகங்களை திறந்தாலும், இயற்கை உணவு பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள். 'இதை சாப்பிடலாம், அதை சாப்பிடாதே' என்று ஆளாளுக்கு சொல்கிறார்கள்.

கொஞ்சம் கொஞ்சம் இயற்கை உணவுகளை பின்பற்றவும்  தொடங்கிவிட்டார்கள்!

எல்லோரும் இயற்கை உணவுகள் பக்கம் போய்விட்டால் என்ன செய்வது? அதனால் 'அக்கா மாலா' குளிர்பான நிறுவனம் என்ன செய்தார்கள் தெரியுமா ?

'(ஃப்ரெஷ்-ஆன) பழச்சாறுகளில், அதிக கலோரி! தங்கள் குளிர்பானத்தில் குறைவான கலோரிகள்தான் இருப்பதாக' கருத்துகணிப்புகள் சொல்வதாக வரிந்துகட்டிக்கொண்டு அவசர அவசரமாக ஊடகங்களில் வெளியிட்டார்கள்.

இந்த ஒப்பீடே தவறு போல தெரிகிறது! பழச்சாறுகளில் இருக்கும் நன்மை பயக்கும் எந்த வேதிப்பொருட்களும்  எந்த குளிர்பானங்களிலும் கிடையாது! அவை வெறும் 'சக்கரை தண்ணி'! ஒரு குளிர்பானத்தை இன்னொரு குளிர்பானத்தொடு வேண்டுமானால் ஒப்பிடலாம்!

http://slism.com/images-slider/fresh-fruit-juice-diet/fresh-fruit-juice-diet-02s.jpg

* * * * * * *

'ஜெர்மன் ஃபார்மிலா' !

சமீபகால விளம்பரங்களில் தங்கள் தயாரிப்புகள் 'ஜெர்மன் ஃபார்மிலா'வை(Formula-வாம்) பின்பற்றுவதாக சொல்கிறார்கள்.  'ஜெர்மன் ஃபார்மிலா(?!?!)' - உண்மையா இல்லையா? அந்த ஃபார்முலா தரும் கம்பெனி உண்மையா உப்புமாவா?  என்று யார் போய் பார்க்கப்போகிறார்கள்?

நல்ல/அத்தியாவசிய பொருட்கள் எதுவானாலும் பயன்படுத்துவதில் தப்பில்லை என்பது என் கருத்து! ஆனால், டம்பம் அடிக்கும், படிப்பதற்கே கடினமான குட்ட்ட்ட்ட்டி  டிஸ்கிளைமர்/வார்னிங் போடும் விளம்பரத் தயாரிப்புகள் மட்டும் கிலியை கிளப்புகிறது!


* * * * * * *

(மீண்டும் சந்திக்கலாம்!)

No comments:

Post a Comment

தங்களுடைய மேன்மையான கருத்துக்களை இங்கே தரவும். கருத்திட்டமைக்கு மிக்க நன்றி. மீண்டும் வருக

இன்னிசை அளபெடை சினிமாவிலா ?

கே ப்டன்   விஜயகாந்த் அவர்கள் தோன்றும் திரைப்பாடல்களில், ' இன்னிசை அளபெடை '-யை எளிதாகக்காணலாம் ( இன்னிசை அளபெடை  என்பது செய்யுளை இனி...