பாரதம் ஒரு பணக்கார நாடு தெரியுமா?

. உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும் நமது பாரதம் வளமான நாடாக ஒரு காலத்தில் இருந்தது.. அந்த வளங்களை பார்த்து ஆசைப்பட்டுதான் நமது நாட்டை கைப்பற்றி அடிமையாக்கினார்கள் ஆங்கிலேயர்கள்.. நம்மை ஆண்டபோது, நம்மிடம் இருந்து, அவர்கள் தங்கள் நாட்டிற்கு திருடிக்கொண்டுபோன செலவங்கள் மட்டுமே - பல ஆயிரம் பில்லியன் பவுண்டுகள் தாண்டும் எனப்படுகிறது.. கீழே உள்ள விஷயத்தை பாருங்கள்.. (தெளிவற்ற படத்திற்கு மன்னிக்கவும்)

Lord Macaulay

ஆதாரம்: மின்னஞ்சலில் வந்த ஒளிப்படம்.

ஆஞ்சநேயரும் அர்ச்சுனரும்...(தெரிந்த கதை?)

. தன் சகோதரர்கள்(கெளரவர்கள்) மேல், கொடிய அஸ்திரங்களைப் பிரயோகிக்க மனமின்றி, பாசுபத அஸ்திரத்தை தேடிக்கொண்டுவர கிளம்பினார் அர்ச்சுனன்.(பாசுபதம் சற்று மயக்கமுறச்செய்யும். அவ்வளவே)

போகிற வழியில் அனுமன் தவம் செய்துகொண்டிருப்பதைக்கண்டார்.

அவரிடம் நக்கலாக,"உங்கள் இராமர் பெரிய வில்லாளி ஆயிற்றே. தான் ஒரே ஆளாக அம்பெய்தே ஒரு பலமான பாலம் கட்டமுடியுமே.. ஏன் குரங்குப்படையை வைத்து கற்களால் கட்டினார்?"

அர்ச்சுனின் கர்வத்தை அடக்கவேண்டும் என்ற கோபம் அனுமனுக்கு உண்டாயிற்று.

"அம்பால் ஆன பலமான பாலத்தை இப்பொழுதே கட்டுக. என் கால்சுண்டுவிரல் பட்டதும் அது சுக்குநூறாகும்"

அர்ச்சுனனும் விடவில்லை. "அப்படிமட்டும் நடந்தால், இங்கேயே வேள்வி ஏற்படுத்தி அதில் என்னை மாய்த்துக்கொள்வேன்" என சூளுரைத்தார்.

"நானும் சொல்கிறேன். அவ்வாறின்றி நான் தோற்றால் உமது போர்க்கொடியில் இருந்துகொண்டு, என் வாழ்நாள் முழுவதும் உமக்கு அடிமையாக இருப்பேன் "

உடனே, நாணில் அம்புகள் பூட்டி எய்து, ஒரு பாலம் உருவாக்கினார் அர்ச்சுனன். எத்தனைகோடி பேரையும் தாங்கும் பலமான பாலமாக அது இருந்தது.

இப்பொழுது, அனுமனுடைய முறை.

"ஜெய்ராம்" என்று இராமனைத் தியானித்ததும் அவர் உருவம் வளரத்தொடங்கியது...
பேருருக்கொண்ட அனுமன் பாலத்தின் மீது கால்வைத்தார்.

அந்தோ...எது நடக்கக்கூடதோ, அது நடந்தேவிட்டது. அனுமனின் கால்பட்டதும் பாலம் சுக்குநூறாகிப்போனது...

அனுமன் வெற்றிக்களிப்பில் ஆடினார். ஒடினார். கூக்குரலிட்டார்..

அர்ச்சுனனுக்கு அதிர்ச்சி... தமது வில் திறமை பொய்த்துவிட்டதே என்ற துக்கம் தாங்கமுடியவில்லை. வேறுவழியின்றி வேள்வி வளர்க்கத்தொடங்கினார்.

"வந்த நோக்கத்தை விட்டுவிட்டு, ஓர் அற்பக்குரங்கிடம் பந்தயம்கட்டி உயிரை விடப்போகின்றேனே... என் அண்ணனின் நிலையையும், என் கடமையையும் மறந்து, கர்வத்தால் மதிமயங்கிப்போனேனே. கண்ணா, என் இறைவா என்ன செய்யப்போகிறேன்" என்று கலங்கினார்.

தீக்குள் அர்ச்சுனன் குதிக்கமுற்பட்டபோது,"என்ன பிரச்சினை இங்கே?" என்றொரு குரல் கேட்டது.

பார்த்தால் ஒரு அந்தணன் நின்றுகொண்டிருந்தான்(அது கண்ணன் தான் என்பதை சொல்ல தேவையில்லை)

பந்தயத்தைப்பற்றி சொன்னார் அர்ச்சுனன்.

"பந்தயம் என்றாலே நடுவர் ஒருவர் வேண்டும். நடுவர் இன்றி நீ எப்படி தோற்றதாக கருதப்படும்?இப்பொழுது நான் நடுவராக இருக்கிறேன். உங்கள் போட்டியை மீண்டும் தொடங்குங்கள்"

போட்டி மீண்டும் தொடங்கியது.

தனக்கு கிடைத்த மறுவாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தார் அர்ச்சுனன். கண்ணனை தியானித்துக்கொண்டே மீண்டும் அம்பெய்து ஒரு பலமான பாலம் கட்டினார்.

அனுமன் கவலையே படவில்லை.
தன் பலம்பற்றி தனக்கே தெரியாத சாபம் பெற்றிருந்த அனுமனுக்கு தன் வல்லமை புரிந்தவுடன் கர்வம் வந்திருந்தது...

"இதோ பார்...உன் பாலம் எப்படி நொறுங்கப்போகிறது பார்" என்றபடி பாலத்தின்மீது ஏறி நின்றார்...ஆடினார்...ஓடினார்...குதித்தார்...பாலம் மட்டும் அப்படியே இருந்தது...ஒன்றும் ஆகவில்லை.

"பார்த்தாயா என் மாமனின்(கண்ணன்) சக்தியை? உங்கள் இராமரால்கூட உம்மை காப்பாற்றமுடியவில்லையே" என்று கேலிசெய்தார் அர்ச்சுனன்.

"நிறுத்துக உமது கொக்கரித்தலை. எங்கள் இராமரைவிட உன் கண்ணன் அவ்வளவு பெருமைக்குரியவன் இல்லை"

"யார் பெரியவர் என்று நான் சொல்கிறேன்", திரும்பினால், விஷ்ணு நின்றார்...

"கர்வம் தோன்றும்போது நம் கடமையும் பொறுப்புகளும் மறந்துவிடுகின்றன...ஒரே பரம்பொருளின் இரு அவதாரங்கள்தான் இராமனும்,கண்ணனும்...அப்படியிருக்க இதில் யார் பெரியவன் என்பது அர்த்தமற்ற விவாதம். இருவருடைய பக்தியும் அளவுகடந்தது, சந்தேகமேயில்லை. ஆனால், இறைவன் ஒருவனே என்பதை உணரமறந்துவிட்டீர்கள்"

இருவரும் நெகிழ்ந்து போய் நின்றார்கள்...

”அதுவும் தவிர, அர்ஜூனனுக்கு பாரதப்போரில் அனுமனின் ஆசிர்வாதம் அவசியம் தேவை. அதற்காக அர்ஜூனனின் போர்க்கொடியில் இருந்துகொண்டு ஊக்கமளிக்கவேண்டுமென்பதலால், இந்த சிறு திருவிளையாடல் நிகழ்த்தப்பட்டது..”

“அப்படியே ஆகட்டும் பிரபோ..!!” என்றார் அனுமன்.

பிறகு அனுமன் தான் சொன்னபடி அர்ச்சுனன் போர்க்கொடியில் இருந்துகொண்டு தன் வாழ்நாள்மட்டும் சேவை செய்தார்.

(ஆஞ்சநேயர் புராணத்திலிருந்து) - இது ஒரு மீள்பதிவு சில மாற்றங்களுடன்.

சந்திரனில் தண்ணீர் Vs நிலா Real Estate.

. சந்திரனில் தண்ணீர் கண்டுபிடித்ததை வைத்து ஏகப்பட்ட பரபரப்பு செய்திகள் நாளிதழ்களையும், வலைப்பக்கங்களையும் நிரப்புகின்றன.. ’விண் ஆராய்ச்சி, வீண் செலவு’ என்ற நிலைமைமாறி, இன்னும் உற்சாகமாக இயங்குகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்..

விடுவார்களா துட்டு பார்ட்டிகள்?? இப்பொழுதே இடம் வாங்கிப்போடுகிறார்கள் நிலாவில் !!! ஒரு ஏக்கருக்கு $20 மட்டுமாம்!!! அமெரிக்காவில் இயங்கும் Lunar Embassy கடந்த 29 வருடங்களாக நிலவில் நிலம் விற்கிறார்களாம். மேலும் தகவல்களுக்கு, www.moonshop.com போங்க (ஆதாரம் - The Times of India - 30 Sep 2009)

இவர்கள் எல்லாம் ஒன்றை கவனிக்கவேண்டும்...

திரு. மாதவன் நாயர் அவர்களின் கூற்றுப்படி

‘சந்திரனில் தண்ணீர், தண்ணீர் வடிவத்தில் கிடையாது.. மற்ற கனிமங்களுடன் கலந்து தாதுப்பொருளாக உள்ளது.. குறிப்பாக, ஹைட்ராக்ஸிலுடன் சேர்ந்துதான் தண்ணீர் சந்திரனின் நிலத்தில் காணப்படுகின்றது..

சந்திராயன் 1 அனுப்பிய படங்களை பார்த்தால், துருவப்பகுதிகளில் மட்டும் தண்ணீர் படிமங்கள் இருப்பதாகத்தெரிகின்றது..

Chandrayan-1 NASA Lunar Water Picture

எதிர்காலத்தில் பூமியில் ஏற்படப்போகும் தண்ணீர் பற்றாக்குறை, வாகன எரிபொருள்(Hydrogen) ஆகியவற்றுக்கு backup ஆக சந்திரன் படிமங்களை பயன்படுத்திக்கொள்ளமுடியும்..’

காற்றுமண்டலம், பிராணவாயு இல்லாத இடத்தில் தண்ணீர் எப்படி வந்தது? சூரிய ஒளிதான் மூலகாரணம். சந்திரனின் நிலப்பரப்பில் பட்டு தண்ணீர் மூலக்கூறுகள் தோன்றுகின்றன.. தொடர்ந்து, அங்கே தண்ணீர் படிமங்கள் இருந்து கொண்டிருக்கக்காரணமும் அதுவே..

மற்றபடி,வாழ்வதற்கான எந்தவொரு அடிப்படையும் இல்லாத (அல்லது லாயக்கில்லாத) இடம் நிலா! ஆம்ஸ்ட்ராங் நிலவிற்கு போனதே இன்னும் சர்ச்சையாகயிருக்கின்ற நேரத்தில், அங்கேயே வாழப்போவதற்கான முயற்சிகள் சில கேள்விகளை எழுப்புகின்றன..

முக்கியமாக, பிராணவாயு இல்லாமல் வாழ மனிதன் என்று பரிணாமமாற்றம் பெறுகின்றானோ அன்றுதான் நிலாவில் வாழ்வது சாத்தியமாகும்.

மனிதகுலத்தில், மின்சாரம் முக்கியக்கண்டுபிடிப்பு. பூமிக்கு இருப்பதுபோல, ஈர்ப்பு விசை நிலவில் இல்லாததால், வேகம் முதலான விசை கிடையாது.. அதனால், மின் தயாரிப்பு கடினமானதாக இருக்கும்.. மின் பாட்டரிகளையும் மாற்றாக பயன்படுத்துவது, பெரிய அளவில் இயலாதது..

ஒரு சிறிய கிராம (Lunar Village) அளவில் உருவாக்கவே கடுமையான முயற்சிகளும் கண்டுபிடிப்புகளும் தேவைப்படும்..

அதுவரை நிலா, ”தெரியாத புதையல்” தான். அதுசரி.. விஞ்ஞானிகள் இதை பற்றியெல்லாம் சிந்திக்காமலா இருப்பார்கள்?

புவியிலேயே வாழத்தகுதியற்ற இடங்களாக துருவப்பகுதிகள் மாறிவருகிறது.. அதை மேம்படுத்த வழியிருக்கிறதா?? பூமிப்பரப்பில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டால், கடல் பரப்பிலோ, கடலடியிலோ வீடுகட்டி வாழ்வது போல ஏதாவது கண்டுபிடித்தால் தேவலை !!!

மேலும் கருத்துக்களை இங்கே தரவும்.

Image Source Courtesy: NASA

பேய்க்கதை (யார் பேய் கண்டுபிடியுங்கள்)

. அந்த பூங்காவில் மனித நடமாட்டம் குறைவாக இருந்தது..

அந்த கடுமையான வெயிலுக்கும் குளுமையாக இருந்த புங்கை மரத்தடியிலிருந்த ஒரு சிமெண்ட் பெஞ்சில்.. ஒரு ஆணும், பெண்ணும் அமர்ந்திருந்தார்கள்

Photobucket

”என்னாச்சு ரமேஷ்.. வீட்டுக்கு போனீங்களா?” என்று கேட்டாள் பெண். ரமேஷ் மறுத்தலாக தலையாட்டினான்..

”ஹும்..எல்லாம் முடிஞ்சிடுச்சு.. அங்க போய் என்னாகப்போகுது,கவிதா.. உங்களுக்கு என்னாச்சு..”

ஒரு மெல்லிய தென்றல் காற்று அவள் தலைமுடியை கலைத்து சென்றது..

“எனக்கும் அதேதான், ரமேஷ்.. அவங்க மூஞ்சியிலேயே முழிக்கப்பிடிக்கல.. இங்கேயேதான் இருந்தேன்.. “

அருகில் இருந்த சிமெண்ட் பெஞ்சிற்கு ஒரு ஜோடி வந்தது.. நெருக்கமாக அமர்ந்து பேச ஆரம்பித்தார்கள்..

ரமேஷ் குலுங்கி குலுங்கி அழுதான்.. கவிதா தேற்ற முயன்றாள்.. “ப்ளீஸ்.. கண்ட்ரோல் யுவர்செல்ஃப்..” அவள் கண்களிலும் நீர்..

”ஹெல்லோ பிள்ளைங்களா.. எப்படி இருக்கீங்க?” என்று உற்சாகக்குரல் கேட்டு இருவரும் நிமிர்ந்தார்கள்..

ரங்கநாதன் தாத்தாவும், அவர் மனைவியும் வந்துகொண்டிருந்தார்கள்..

”ஏன் கண்ணீர்? ஓ.. பழசெல்லாம் ஞாபகம் வந்துடுச்சா.. “ என்றவாறு அருகில் வந்தார்கள்..

”ம்..விடுங்கப்பா.. நான், இவ எல்லாம் வயசானவங்க.. உடம்பு சரியில்லாமதான் இருந்தோம்.. ஆனா, எங்களோட ஒப்பிட்டு பார்க்கையில உங்க ரெண்டுபேரு நிலைமையும் ரொம்ப மோசம்-னு இவதான் அடிக்கடி சொல்லிக்கிட்டிருப்பா.. கவலைப்படாதீங்க கண்ணுங்களா.. எல்லாத்தையும் மேல இருந்து ஒருத்தன் பார்த்துக்கிட்டிருக்கான்.. ” என்றபடி கடந்து சென்றார்..

* * * * *
ஒரு அழைப்பு..

கூட்டுமுயற்சியில் உருவான விக்கிப்பீடியா களஞ்சியத்தொகுப்பு மற்றும், “And, now.." போல, எத்தனையோ collaborative writing பிரபலமடைகிறது.

அதேபோல, இந்தக்கதையை இன்னும் வளர்க்கப்பிடித்தால், மேலும் எழுத வேண்டுகிறேன்.. அதாவது, collaborative story writing - க்கு அழைப்பு விடுக்கின்றேன்..
அதாவது, குழுவாக இணைந்து, ஒரு கதையை எழுதலாம். ஒரு சின்ன முயற்சிதான்..

மறவாமல் இந்தக்கதைக்கு லின்க் கொடுத்துவிடவும்..
நன்றி..


* * * * *

Crowdsourcing - ஆன்லைனில் சம்பாதிங்க - ஆர்வகுழுக்கள் !!!

. எதிர்காலத்தில், டாக்டர், வக்கீல், ஆடிட்டர்கள் போல, கணினி வல்லுனர்களும் தனியாகவோ (அல்லது குழுவாகவோ) ஒரு அறை மட்டுமே எடுத்து, 'இங்கு ஆர்டரின் பேரில் தரமான மென்பொருள் செய்து தருகிறோம்' என போர்டு போட்டுக்கொண்டு, பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பணிபுரிவதற்கான காலம் வரும்..

காரணம் - Crowdsourcing !!!

சமீபகாலமாக, இணையத்தில் மெல்ல மெல்ல பரவலாக பாவிக்கப்படும் இந்த உத்திதான், எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளில் மாற்றம் ஏற்படுத்தப்போகும் விஷயமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது..

Crowdsourcing - அப்படீன்னா என்ன?

ஒரு கம்பெனிக்கோ, ஒரு தனிமனிதருக்கோ ஒரு வேலை/பணி செய்யவேண்டியதிருக்கிறது. என்ன செய்வார்? காசிருந்தால் outsource செய்வார்.. ஆனால், 'செய்யவேண்டிய பணி, பெரிய பணி... அதற்கு நிறைய பேர் வேண்டும், சிறந்த தரத்துடன் வெளியீடுகள்(solutions) வேண்டும்' என்று தோணினால், crowdsource செய்வார்..

அதாவது, பொது ஊடகங்களில், இந்த பணி(problem/task) பற்றி தண்டோரா போட்டு அறிவித்துவிடுவார்.. சிறு சிறு குழுக்களாக தங்களை அறிவித்துக்கொள்கிற மென்பொருள் நிபுணர்கள் அல்லது டிசைனர்கள், தங்களுக்கு ஆர்வமுள்ள சில பணிகளை எடுத்துசெய்து தீர்வுகள்(solutions) காண்பார்கள்.. எத்தனை தீர்வுகள் வருகி்ன்றதோ, அத்தனையும், பிற்பாடு Task அறிவித்தவருக்கே சொந்தமாகிறது.. அவர் அதை அப்படியே பயன்படுத்திகொள்ளலாம்.. மாற்றமும் செய்யலாம்.. (இன்னாருடைய தீர்வை பயன்படுத்துகிறோம் என்று சொல்லிவிடுவார்கள்) பின் ஒரு திட்ட மேலாளர் போல செயல்பட்டு ஒருங்கிணைப்பார்கள்...

பெரும்பாலான சமயங்களில், பணியை எடுத்து செய்பவர்களுக்கு முழுவிவரங்களும் தெரிய வாய்ப்பில்லாமல் போவதுண்டு .. உதாரணத்திற்கு, 10000 சென்ட்கள் [#12]. சுமாராக, 5 மாதத்தில், 51 நாடுகளிலிருந்து, 10000 ஓவியர்கள் ஒரு ஒரு புள்ளி மட்டுமே வைத்து வரைந்த ஓவியம். வரைந்து முடித்துபின் மேலாளர் ஒருங்கிணைத்து அறிவித்தபின்னரே தாங்கள் இதற்காகத்தான் பணிபுரிந்திருக்கிறோம் என்று அவர்களுக்கு தெரியவந்தது..

பணி எடுத்து செய்பவர்களுக்கு என்ன($) தருவார்கள்???

பெரும்பாலானவர்கள் இந்த பணிக்கு இவ்வளவு தருவோம் என்று சொல்லிவிடுவார்கள்.. இதற்காக சில தளங்களும் உண்டு.. (தகவல் சற்று கீழே). பணிக்கு ஊதியமாக, பணம் தராமல், சான்றிதழ்கள், அன்பளிப்புகள் தரலாம்.. இன்னும் சிலர், "தங்களுடைய விடா முயற்சியையும் தன்னம்பிக்கையையும் பாராட்டி எங்கள் கம்பெனி அளிக்கக்கூடிய ஒரு அதிசயப்பொருள் இந்த சோப்பு டப்பா" - என்ற அதிர்ச்சியையும் தருவார்கள்.. இணையத்தில் இவ்வாறான 'சோப்பு டப்பா அன்பளிப்பு' கம்பெனிகள் நிறைய இருக்கிறார்கள் என்பது தெரிந்த செய்திதான்!!! ஆனாலும், இந்த (வெறும்) பாராட்டுக்களையும்கூட தங்களுடைய ரெஸியூமில் அள்ளிப்போட்டுக்கொண்டு போகிறவர்களும் இருக்கிறார்கள்..அது அவர்களுடைய Career Development-ற்கு உதவக்கூடுமாம்..

வீக்கிப்பீடியா போன்ற தகவல் களஞ்சியங்கள்,கூகிள் எர்த், ஆன்லைன் குழுமங்கள், forum-கள், ப்ளாக்குகள்,யூ-ட்யூப், ட்விட்டர், லொட்டு லொசுக்கு..ஏன் ஒரு விளையாட்டு[#11] கூட உள்ளது.. இப்படி எல்லாமே crowdsourcing-ன் சாயல்களே... என்ன, இவற்றுக்கெல்லாம் பைசா கிடையாது.. தபால்தலை சேகரிப்பவர்கள், காசுக்காகவா செய்கிறார்கள்.. அதுபோலத்தான் இதுவும்!

காசு தரக்கூடிய வலைதளங்களும் உண்டு.. உதாரணத்திற்கு, குரு[#1], 99டிசைன்ஸ்[#2], இன்னொசென்டிவ்[#3], எம்-டர்க்[#4], ஆகியன..

அழகழகாக டீசர்ட் டிசைன் செய்து அல்லது பஞ்ச் வாசகங்கள் பதித்து சம்பாதிக்க ஆசையா.. (சினிமா பஞ்ச் கூடவே கூடாது) இப்படிப்பட்டவர்களுக்கானதுதான் இந்த த்ரெட்லெஸ்[#5]. நல்ல டிசைன்கள், வாசகங்களுக்கு வாக்களித்தாலும் பரிசுகள் உண்டு.. இங்கே முக்கியப்பணிகள் எல்லாவற்றையும் open call-ல் அறிவிக்கிறார்கள்.. (New Update:டீ-சர்ட் டிசைன் பற்றி கற்றுகொள்வதற்கான தளங்களின் விவரங்கள் கீழே [#14])

நிறுவனங்கள், அமைப்புகள்,(நம்மூரில் கழகங்கள், குழந்தைகள் போல) ஆகியவற்றுக்கு நல்ல நல்ல பெயர்களை வைக்கவும், சிறந்தவற்றுக்கு வாக்களிக்கவும் அழைப்பு விடப்படுகின்றது.. [#7]. பெயர்சூட்டலுக்கும், வாக்களிப்புக்கும் பரிசு.

Crowdsourcing - ஒரு வரப்பிரசாதமா??

குழப்பம்தரும் கேள்வி.. சின்னச்சின்ன பணிகளுக்கு, தரமான தீர்வுகளை வேண்டும் என நினைக்கும் சிறு நிறுவனங்களுக்கு, இது வரப்பிரசாதம்தான்..

பெரும் வர்த்தகப்பணிகளை பிரித்துத்தருவது மற்றும் ரகசியம் காக்கப்படவேண்டிய(confidential) பணிகள் ஆகியவைகளை crowdsource பண்ணுவது உசிதமல்ல.. Outsourcing-கில், ஒப்படைத்த பணி தாமதமானால், 'ஏய்யா லேட்டு?' என்று கேட்கலாம்.. Crowdsourcing-கில், அது முடியாது.. அவர்களாக பார்த்து முடித்துத்தந்தால்தான் ஆச்சு.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் தருவார்கள்.. முடிக்காமல் விடவும் சாத்தியம் அதிகம்..ஏனெனில்,இங்கே சேவை கால ஒப்பந்தம்(SLA) கிடையாது..

இன்னொருபக்கம், பணியை எடுத்துக்கொண்டு சன்மானம் தராமல் ஏமாற்றுகிற ஆன்லைன் நிறுவனங்கள் அதிகம் இருப்பதை இதன் பிரபலத்திற்கு பின்னடைவாக கருதலாம்..


பணிகள் பற்றிய அறிவிப்புகள் இந்த தளங்களில்:

1) குரு
2) 99டிசைன்ஸ்
3) இன்னோசென்டிவ்
4) எம்-டர்க்
5) டீசர்ட் டிசைனிங்,டீசர்ட்டில் வாசகங்கள், வாக்களிப்புகளுக்கு பரிசுகள்
6) என் ஐடியா
7) பேரு வக்ய எங்களுக்கு உதவுங்கள்

மேலும் படிங்க இங்கே,

8) வேறு சில பணிவாய்ப்புகள்
9) 135 சிறு தொழில்களின் தொகுப்பு(சி.தொ. வடிவமாகவே, crowdsourcing பார்க்கப்படுகிறது...கண்டிப்பாக வாசிக்கவேண்டிய ஒன்று)
10) பணி அறிவிக்கும் ப்ளாக்
11) Game with a purposeக்கு, ஒரு நல்ல உதாரணம்
12) 10000 சென்ட்கள்
13) எங்களுக்கு ஐடியா சொல்லுங்க
14) டீ-சர்ட் டிசைன் கற்றுகொள்ள (New Update)

ஆதாரம்:
* அவுட்சோர்ஸிங் அவ்ளோதானா?!!
* வீக்கிப்பீடியா
* பத்தாயிரம் சென்ட்கள்
* தி ஹிண்டு.
* ஆனந்த விகடன்.
* * * * * * * * * * * *

இன்றைய ஆச்சர்யம்: சேலத்தில், விபத்தில் சிக்கி, கோமாவிலிருந்த ஒரு சிறுபிள்ளையை, சுயநினைவுக்கு மீட்டெடுக்க உதவியாக இருந்தது - வடிவேலுவின் காமெடிக்காட்சிகளே! (நன்றி: குமுதம்)
Related Posts with Thumbnails