Showing posts with label Ghost story. Show all posts
Showing posts with label Ghost story. Show all posts

Thursday, August 20, 2009

பேய்க்கதை (யார் பேய் கண்டுபிடியுங்கள்)

அந்த பூங்காவில் மனித நடமாட்டம் குறைவாக இருந்தது..

அந்த கடுமையான வெயிலுக்கும் குளுமையாக இருந்த புங்கை மரத்தடியிலிருந்த ஒரு சிமெண்ட் பெஞ்சில்.. ஒரு ஆணும், பெண்ணும் அமர்ந்திருந்தார்கள்

Photobucket

”என்னாச்சு ரமேஷ்.. வீட்டுக்கு போனீங்களா?” என்று கேட்டாள் பெண். ரமேஷ் மறுத்தலாக தலையாட்டினான்..

”ஹும்..எல்லாம் முடிஞ்சிடுச்சு.. அங்க போய் என்னாகப்போகுது,கவிதா.. உங்களுக்கு என்னாச்சு..”

ஒரு மெல்லிய தென்றல் காற்று அவள் தலைமுடியை கலைத்து சென்றது..

“எனக்கும் அதேதான், ரமேஷ்.. அவங்க மூஞ்சியிலேயே முழிக்கப்பிடிக்கல.. இங்கேயேதான் இருந்தேன்.. “

அருகில் இருந்த சிமெண்ட் பெஞ்சிற்கு ஒரு ஜோடி வந்தது.. நெருக்கமாக அமர்ந்து பேச ஆரம்பித்தார்கள்..

ரமேஷ் குலுங்கி குலுங்கி அழுதான்.. கவிதா தேற்ற முயன்றாள்.. “ப்ளீஸ்.. கண்ட்ரோல் யுவர்செல்ஃப்..” அவள் கண்களிலும் நீர்..

”ஹெல்லோ பிள்ளைங்களா.. எப்படி இருக்கீங்க?” என்று உற்சாகக்குரல் கேட்டு இருவரும் நிமிர்ந்தார்கள்..

ரங்கநாதன் தாத்தாவும், அவர் மனைவியும் வந்துகொண்டிருந்தார்கள்..

”ஏன் கண்ணீர்? ஓ.. பழசெல்லாம் ஞாபகம் வந்துடுச்சா.. “ என்றவாறு அருகில் வந்தார்கள்..

”ம்..விடுங்கப்பா.. நான், இவ எல்லாம் வயசானவங்க.. உடம்பு சரியில்லாமதான் இருந்தோம்.. ஆனா, எங்களோட ஒப்பிட்டு பார்க்கையில உங்க ரெண்டுபேரு நிலைமையும் ரொம்ப மோசம்-னு இவதான் அடிக்கடி சொல்லிக்கிட்டிருப்பா.. கவலைப்படாதீங்க கண்ணுங்களா.. எல்லாத்தையும் மேல இருந்து ஒருத்தன் பார்த்துக்கிட்டிருக்கான்.. ” என்றபடி கடந்து சென்றார்..

* * * * *
ஒரு அழைப்பு..

கூட்டுமுயற்சியில் உருவான விக்கிப்பீடியா களஞ்சியத்தொகுப்பு மற்றும், “And, now.." போல, எத்தனையோ collaborative writing பிரபலமடைகிறது.

அதேபோல, இந்தக்கதையை இன்னும் வளர்க்கப்பிடித்தால், மேலும் எழுத வேண்டுகிறேன்.. அதாவது, collaborative story writing - க்கு அழைப்பு விடுக்கின்றேன்..
அதாவது, குழுவாக இணைந்து, ஒரு கதையை எழுதலாம். ஒரு சின்ன முயற்சிதான்..

மறவாமல் இந்தக்கதைக்கு லின்க் கொடுத்துவிடவும்..
நன்றி..


* * * * *

இன்னிசை அளபெடை சினிமாவிலா ?

கே ப்டன்   விஜயகாந்த் அவர்கள் தோன்றும் திரைப்பாடல்களில், ' இன்னிசை அளபெடை '-யை எளிதாகக்காணலாம் ( இன்னிசை அளபெடை  என்பது செய்யுளை இனி...