Friday, November 18, 2011

எண்ணச்சிதறல்கள் ( 01-12-2011 வெள்ளி)


இதயம் பேத்துகிறது!

வஹர் சார் தலைப்பு இங்கு ஏன்? ப்ளாக்கர் செட்டிங்கில் புதுமையாக புகுத்துகிறேன் பேர்வழி என்று எதோ செய்யப்போய், தளத்தையே ஒரு வாரமாகக்காணோம்! தளத்தை மீட்டெடுத்தது வரை ஒரே தவிப்பு - அதான் இந்த தலைப்பு!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

மீடியாக்கள்!
டந்த ஒரு வருடமாக முதல்பக்கங்களில் வைத்து போற்றப்பட்ட செய்தி! அபி-ஐஸ்க்கு குழந்தை பிறக்கப்போவது. அதைக்கூட விட்டுவிட்டார்கள். பிறகு, பிக் பாஸில் ஒரு வெளிநாட்டு கவர்ச்சி மங்கை இணைந்ததை பெரிய செய்தியாக சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதுபோய், பால்,பெட்ரோல் விலையேற்றம், பேஸ்புக்கில் ’கொலைவெறி’யோடு ’கொலவெறி’,பவார்-அறை, திகார்-சிறை, மழை, நிவாரண உதவி அப்புறம் இடையிடையே மானே தேனே பொன்மானே... - ’செய்தியோடை’ என்பது சரியாகத்தான் இருக்கிறது. ஓடியேபோய்விடுகின்றது...


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

Why this Kolaveri Kolaveri Di?



வீக்கிப்பீடியாவில்  தனிப்பக்கமே உருவாக்கிவிட்டார்கள். யூட்யூபில், இதுவரை 1 கோடியே 30 லட்சம் ஹிட்ஸ்கள்! தனுஷ்க்கு ’போதையில்’ இருப்பதுபோல பாடுவது தண்ணீர் ப(போ)ட்ட பாடு! அவரின் முதல் பாடல் ”நாட்டுச்சரக்கு நச்சுனுதான் இருக்கு”, பிறகு “ஒம்மேல ஆசதான்”, ”கொலவெறி” எல்லாமே போதைப்பாடல்கள்தான்..


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

கத்தார் - சில துளிகள்

* கத்தார் நாட்டில், பதினைந்து, இருபது வருடங்களாக குடும்பத்துடன் செட்டிலான தென்னிந்தியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் மலையாளிகள். ஆர்ம்ஸ்ட்ராங் முதன்முதலில் நிலாவுக்கு போகும்போது, அங்கே ஒரு நாயர்  - ஏற்கனவே - டீக்கடை போட்டிருந்தாராம்! சும்மாவா இந்த ஜோக்கை சொல்லியிருப்பானுங்க!! வாடகைவீடு தேடிக்கொண்டிருக்கிறோம். கேரள ஏஜெண்ட்கள் பேசும் தமிழ் மிகச்சிரிப்பாக இருக்கும்(ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை!) - “அல் துமாம்மாவில் ஒரி டபுள் பெட்ரூம் இரிகி. நஜ்மாவிலே சிங்கில் இரிகி...” இந்த ரேஞ்சுக்கு தமிழ் பேசுகிறார்கள்! நான் நினைத்துக்கொண்டேன் - “அகில உலகத்திலும் தமிழ் வாழ்ந்துகொண்டு இரிகி!” (கத்தார் நண்பர்கள் யாராவது டோஹாவில் வீடு வாடகைக்கு இருந்தா சொல்லுங்களேன்..! வீடு கிடைப்பது ரொம்ப சிரமமாக இருக்கிறது..:( )

* KUBOOS : தென்னிந்திய உணவகங்களும் இருக்கின்றன. நாங்கள் அடிக்கடி சாப்பிடுவது - பாரத் (எ) வசந்த பவன். கேரள ரெஸ்டாரண்ட்களில், மோட்டா, பாரிக், பாஸ்மதி மூன்றும் உண்டு. அரபிக் க்யுசின்களில், குபூஸ் என்ற ஐட்டத்தை இலவசமாக தருகிறார்கள். அவசியம் சேர்த்து வாங்கவேண்டிய தந்தூரி ஐட்டங்கள் மட்டும் காசுக்கு! இந்த குபூஸ் (குஷ்பூ, குஷ்பூனு படிச்சீங்கன்னா என் தப்பு இல்லீங்க), மைதா + கொஞ்சம் கோதுமையில் செய்யப்படுகிறதாம். தினம் தினம் சாப்பிட்டால், பெரிய ஆளாக - சைசில் - வருவீர்கள்  !! அவ்வளவு கலோரிஸ்! சரியான டயட்-டை பின்பற்ற விரும்புபவர்களுக்கு ஏற்ற உணவு அல்ல குபூஸ்! அடிக்கடி வளைகுடாக்களுக்கு  விசிட் அடிக்கும் நண்பர்களுக்கு இது தெரிந்து இருக்கும். சொந்த ஊர் வரும்போது, ’வேறு ஆள்’ போன்று தோற்றமளிக்க சரக்கு மட்டுமில்லை.. இந்த குபூஸூம் ஒரு காரணம்!

* துபாய், குவைத், கத்தார், பஹ்ரைன்,ஓமன் போன்ற வளைகுடா நாடுகளில் பழைய காலங்களில் -  1959 க்கு முன்பு - புழக்கத்தில் இருந்த பணம் - இந்திய ரூபாய்கள்!!  பிறகு, கிபி 1966 வாக்கில் இந்தியாவே அவர்களுக்கென்று அறிமுகம் செய்த பணம் - வளைகூடா ரூபாய். அந்த சமயங்களில், ஒரு இங்கிலாந்து பவுண்ட் நாணயத்தின் மதிப்பு, ரூ. 13.50 இந்திய ரூபாயாம் (ம்ஹூம் .. !!!). ரூபாய் மதிப்பு, குறைய குறைய வளைகுடா நாடுகள் ரூபாயை கைவிட்டு, தத்தம் கரன்ஸிகளை உருவாக்கவேண்டியிருந்தது. ஆரம்பத்தில், அந்த நாடுகளின் கரன்ஸிகள், ரூபாய்களுக்கு சமமான மதிப்பைக்கொண்டிருந்தன.

* ளைகுடா நாடுகளிலேயே முதன்முதலாக, கிபி 2022 வில், FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கப்போவதால், மொத்த கத்தாரும் புதுக்கோலம் போடத்தயாராக இருக்கிறது. துபாய் அளவுக்கு கட்டுமானத்துறையில் புகழ்பெறுவதற்காக பழைய கட்டிடங்களெல்லாம் இடிபடுகின்றது. சிங்கார டோஹா, சிங்கார வாக்ரா(ஹ்) எல்லாம் பார்க்கலாம் - கூடிய விரைவில்!

* தோ சொல்வார்கள் - ‘எள்ளு எண்ணையில வேகுது, ’......................’, எதுக்கு வேகுது??’. சென்னையில கடும்மழை, சாலைகளில் தண்ணீர் சரி.. எழில் வெயில் கொஞ்சும் பாலைவன கத்தாரில், அடைமழையும் சாலை தண்ணீர்த்தேங்கலும் இருந்தால் என்னவென்று சொல்வது?

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

”நண்பன்”

வைரஸாக சத்யராஜ், சரியான தேர்வு. சரி, சைலன்ஸர் யார்? என்று ஆவலாக இருந்தது.. அதற்கு, சத்யன்! கொஞ்சம் சவாலான பாத்திரமாக இருக்கும் அவருக்கு(சாம்பிள் கீழே!). நிஜ ‘சைலன்ஸருக்கு’ ஹிந்தி தெரியாதாம். அந்த அப்பாவித்தனம் கூட அந்த காரெக்டருக்கு வெற்றியைத்தந்தது!

எனக்கொரு கேள்வி.., எல்லோரும் பார்த்துவிட்ட படத்தை ரீமேக்கி என்ன செய்யப்போகிறார்கள்??!!



* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
”தில்லானா மோகனாம்பாள்” - கிடைக்கறியா ஒரு ஆவணப்படம்



திருமணத்திற்குப்பிறகு திருமதி.பத்மினி அவர்கள் நடித்த முதல்படம் என்று சொல்லப்பட்டது. இந்தக்காலத்து, சைஸ் ஜீரோ, சிக்ஸ் பேக்ஸ்-ஸோடு ஒப்பிட்டப்பார்க்கமுடியாது என்றாலும், இந்தப்படத்தில் நடித்த ஒவ்வொருவரின் நடிப்பும் க்ளாஸ், இல்லையா!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

சலங்கையிட்டால் ஒரு மாது...!



விஜய டி. ராஜேந்தர் இயக்கி நடித்த இந்தப்படத்தில் தான் முதன்முதலாக அமலா அறிமுகமானார். டி.ஆர். தான் இசையமைப்பாளரும் பாடலாசிரியரும் கூட! ஏனோ தானோ என்றெல்லாம் இல்லை! ஆகா ஓகோ!! உதாரணத்திற்கு, இந்தப்பாடல் இசைஞானியையே திரும்பிப்பார்க்கவைத்திருக்கும் என்று நினைக்கத்தோன்றுகிறது. பாடல் வரிகள் மட்டும் எப்படியாம் - ??? 

"தடாகத்தில் மீன் ரெண்டு, காமத்தில் தடுமாறி தாமரை பூமீது விழுந்தனவோ, இதைக்கண்ட வேகத்தில், பிரம்மனும் மோகத்தில் படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ???!!”

Hats Off to you TR Sir!!!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மீண்டும் சந்திப்போம்!!!

No comments:

Post a Comment

தங்களுடைய மேன்மையான கருத்துக்களை இங்கே தரவும். கருத்திட்டமைக்கு மிக்க நன்றி. மீண்டும் வருக

இன்னிசை அளபெடை சினிமாவிலா ?

கே ப்டன்   விஜயகாந்த் அவர்கள் தோன்றும் திரைப்பாடல்களில், ' இன்னிசை அளபெடை '-யை எளிதாகக்காணலாம் ( இன்னிசை அளபெடை  என்பது செய்யுளை இனி...