Friday, September 25, 2009

சந்திரனில் தண்ணீர் Vs நிலா Real Estate.

சந்திரனில் தண்ணீர் கண்டுபிடித்ததை வைத்து ஏகப்பட்ட பரபரப்பு செய்திகள் நாளிதழ்களையும், வலைப்பக்கங்களையும் நிரப்புகின்றன.. ’விண் ஆராய்ச்சி, வீண் செலவு’ என்ற நிலைமைமாறி, இன்னும் உற்சாகமாக இயங்குகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்..

விடுவார்களா துட்டு பார்ட்டிகள்?? இப்பொழுதே இடம் வாங்கிப்போடுகிறார்கள் நிலாவில் !!! ஒரு ஏக்கருக்கு $20 மட்டுமாம்!!! அமெரிக்காவில் இயங்கும் Lunar Embassy கடந்த 29 வருடங்களாக நிலவில் நிலம் விற்கிறார்களாம். மேலும் தகவல்களுக்கு, www.moonshop.com போங்க (ஆதாரம் - The Times of India - 30 Sep 2009)

இவர்கள் எல்லாம் ஒன்றை கவனிக்கவேண்டும்...

திரு. மாதவன் நாயர் அவர்களின் கூற்றுப்படி

‘சந்திரனில் தண்ணீர், தண்ணீர் வடிவத்தில் கிடையாது.. மற்ற கனிமங்களுடன் கலந்து தாதுப்பொருளாக உள்ளது.. குறிப்பாக, ஹைட்ராக்ஸிலுடன் சேர்ந்துதான் தண்ணீர் சந்திரனின் நிலத்தில் காணப்படுகின்றது..

சந்திராயன் 1 அனுப்பிய படங்களை பார்த்தால், துருவப்பகுதிகளில் மட்டும் தண்ணீர் படிமங்கள் இருப்பதாகத்தெரிகின்றது..

Chandrayan-1 NASA Lunar Water Picture

எதிர்காலத்தில் பூமியில் ஏற்படப்போகும் தண்ணீர் பற்றாக்குறை, வாகன எரிபொருள்(Hydrogen) ஆகியவற்றுக்கு backup ஆக சந்திரன் படிமங்களை பயன்படுத்திக்கொள்ளமுடியும்..’

காற்றுமண்டலம், பிராணவாயு இல்லாத இடத்தில் தண்ணீர் எப்படி வந்தது? சூரிய ஒளிதான் மூலகாரணம். சந்திரனின் நிலப்பரப்பில் பட்டு தண்ணீர் மூலக்கூறுகள் தோன்றுகின்றன.. தொடர்ந்து, அங்கே தண்ணீர் படிமங்கள் இருந்து கொண்டிருக்கக்காரணமும் அதுவே..

மற்றபடி,வாழ்வதற்கான எந்தவொரு அடிப்படையும் இல்லாத (அல்லது லாயக்கில்லாத) இடம் நிலா! ஆம்ஸ்ட்ராங் நிலவிற்கு போனதே இன்னும் சர்ச்சையாகயிருக்கின்ற நேரத்தில், அங்கேயே வாழப்போவதற்கான முயற்சிகள் சில கேள்விகளை எழுப்புகின்றன..

முக்கியமாக, பிராணவாயு இல்லாமல் வாழ மனிதன் என்று பரிணாமமாற்றம் பெறுகின்றானோ அன்றுதான் நிலாவில் வாழ்வது சாத்தியமாகும்.

மனிதகுலத்தில், மின்சாரம் முக்கியக்கண்டுபிடிப்பு. பூமிக்கு இருப்பதுபோல, ஈர்ப்பு விசை நிலவில் இல்லாததால், வேகம் முதலான விசை கிடையாது.. அதனால், மின் தயாரிப்பு கடினமானதாக இருக்கும்.. மின் பாட்டரிகளையும் மாற்றாக பயன்படுத்துவது, பெரிய அளவில் இயலாதது..

ஒரு சிறிய கிராம (Lunar Village) அளவில் உருவாக்கவே கடுமையான முயற்சிகளும் கண்டுபிடிப்புகளும் தேவைப்படும்..

அதுவரை நிலா, ”தெரியாத புதையல்” தான். அதுசரி.. விஞ்ஞானிகள் இதை பற்றியெல்லாம் சிந்திக்காமலா இருப்பார்கள்?

புவியிலேயே வாழத்தகுதியற்ற இடங்களாக துருவப்பகுதிகள் மாறிவருகிறது.. அதை மேம்படுத்த வழியிருக்கிறதா?? பூமிப்பரப்பில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டால், கடல் பரப்பிலோ, கடலடியிலோ வீடுகட்டி வாழ்வது போல ஏதாவது கண்டுபிடித்தால் தேவலை !!!

மேலும் கருத்துக்களை இங்கே தரவும்.

Image Source Courtesy: NASA

3 comments:

  1. இப்பவே தண்ணி லாரியெல்லாம் ரெடியா நிக்குதே!!

    சந்திரா! நீ பாவம் எங்களால் என்ன பாடுபடப் போகிறாயோ!?

    ReplyDelete
  2. //நானானி said...

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)

    ReplyDelete
  3. நன்றி வெங்கட்... தங்களுடைய கருத்துக்களுக்கும்!!

    :)

    ReplyDelete

தங்களுடைய மேன்மையான கருத்துக்களை இங்கே தரவும். கருத்திட்டமைக்கு மிக்க நன்றி. மீண்டும் வருக

இன்னிசை அளபெடை சினிமாவிலா ?

கே ப்டன்   விஜயகாந்த் அவர்கள் தோன்றும் திரைப்பாடல்களில், ' இன்னிசை அளபெடை '-யை எளிதாகக்காணலாம் ( இன்னிசை அளபெடை  என்பது செய்யுளை இனி...