Saturday, May 26, 2012

அறிவுஜீவி பிராணிகள் !!! (2012-05-26 - சனி)

க்டோபஸ், ஆரூடம் பார்க்கும் என்றுதான் நாம் தெரிந்துவைத்திருக்கிறோம். ஆனால், அவற்றின் இரு முக்கியமான குணநலன்களுக்கு அறிவியல்மூலம் விடைகாண முடியாமல் ஆராய்ச்சியாளர்கள் திணறுகிறார்கள். இந்த கட்டுரையின் முடிவில் ஒருவித வியப்புடன்தான் செல்வீர்கள் என்பதற்கு என்னால் உத்திரவாதம் அளிக்கமுடியும்!

ஆக்டோபஸ்களின் இந்த குணநலன்கள் இதே குடும்பத்தில்(தலைகாலிகள் அல்லது மெல்லுடலிகள் இனம்) உள்ள பிற பிராணிகளான கட்டில் ஃபிஷ் (Cuttlefish) மற்றும் ஸ்க்விட்டுகளுக்கும்(Squid) பொருந்தும்.

அந்த குணநலன்கள் எவை ??
# Camouflage : சமயத்திற்கு/சூழ்நிலைக்கு தகுந்தவாறு தன் மேற்தோல் வண்ணத்தை மாற்றிக்கொள்வது(Color/Pattern/Shape Changing): உடல் வண்ணமட்டுமில்லை மேற்தோல் பாறையில் இருந்தால் சொறசொறப்பாகவும், செடியில் இருந்தால் முட்கள் போலவும் மாற்றிக்கொள்கிறது. Shape Changing என்று சொல்லப்படுவது மிமிக் ஆக்டோபஸ் (Mimic octopus) போன்ற அரிதான சில வகை ஆக்டோபஸ்கள் பயன்படுத்தும் உத்தி. இந்த உருமாறும் குணத்தினாலோ என்னவோ, மிமிக் ஆக்டோபஸ் என்று உண்டென்று ரொம்ப சமீபத்தில்தான் தெரிந்திருக்கிறது.(1998 வருடம்).

(நகரும் பாறையிலிருந்து கடல்பாசியாக!!!)

# Intelligence : நுண்ணறிவு : மனிதனுக்கு இணையாகவோ அல்லது அதைவிட அதிகமான(!) நுண்ணறிவைக்கொண்டிருக்கின்றன ஆக்டோபஸ்கள். மனிதன், ஆபத்திலிருந்து தன்னை சமயோசிதமாக தற்காத்துக்கொள்வது மற்றும் தொலைநோக்குப்பார்வையுடன் செயல்படுவது ஆகிய திறன்களை தன் சமூகமாக இயங்கும் வழக்கத்திலிருந்து(Social) அல்லது முன்னோர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறான். ஆனால், இந்தப்பிராணிகள் Non-Social Animals !!! முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவந்தவுடன் தாய்-தந்தை ஆக்டோபஸ்கள் இறந்துவிடுவதால், தனித்தனியாக வாழ்கின்றன. Cannibals வேறு என்பதால், ஒரு ஆக்டோபஸ் மற்றொரு ஆக்டோபஸிடமிருந்து மறைந்து வாழ்வது இன்றியமையாதது. அவைக்கொண்டிருக்கிற கலர்மாறும் குணமும், நுண்ணறிவும் பரிணாமத்தின் கட்டாயம்.


(நுண்ணறிவு மற்றும் கற்றுக்கொள்ளும் செயல் -  சோதனை!!!)

அவற்றின் நுண்ணறிவுக்கான மற்றொரு ஆராய்ச்சியில், இரண்டு கொட்டாங்குச்சிகளை(Coconut Shells) வெவ்வேறு இடத்தில் போட்டுவிடுகிறார்கள். ஆக்டோபஸ் இரண்டையும் ஒரு இடத்திற்கு எடுத்து வருகிறது(Foreseeing & Planning-கின் வெளிப்பாடு). பின் சிப்பிக்குள் அடைபடுவதைபோல தன்னை மூடிக்கொள்கிறது. இந்த தற்காப்பு உத்தியை தானாக சிப்பியிடமிருந்தோ(Shell) ஹெர்மிட் நண்டுகளிடமிருந்தோ(Hermit Crab) கற்றுக்கொள்கின்றன என சொல்லப்படுகிறது..  இதேபோல, மிமிக் வகை ஆக்டோபஸ்கள், பிராணிகள் போலவோ மீன்கள் போலவோ  உருமாறுகின்றன. இப்படி இவை எடுக்கும் உருவங்கள் 15க்கும் மேற்பட்டவை. ஒரு பிராணி தாக்கவரும்போது அந்தந்த பிராணிகளின் Predator கள் உருவத்திற்கு தன்னை மாற்றிக்கொள்கிறது.. உதா.திற்கு, டேம்ஷெல்ஃபிஷ்(Damselfish) தன்னைத்தீண்டும்போது, அந்தமீன்களை உணவாகக்கொள்கின்ற(Predator) நீர்ப்பாம்புகள்போல் உருவத்தை மாற்றிக்கொண்டு அவற்றை மி(வி)ரட்டுகின்றன..

இவற்றை அடிப்படையாக வைத்து சில கேள்விகள் :

”கடன்காரப்பய.. எங்க போனான்னே தெரியலயே!!!
1) வண்ணம்மாற்றி தப்பிக்கமுடியும் என்பதை எப்போது யார் இவற்றுக்கு சொல்லிக்கொடுக்கிறார்கள்?

2)  மிமிக் ஆக்டோபஸ்களிடம் காணப்படுகின்ற சமயோசித உருவமாற்ற நுண்ணறிவை எவ்வாறு பெற்றன?? ஒவ்வொரு பிராணிகளின் Predator-கள் இவையென அவற்றுக்கு எப்படித்தெரிந்தது?

3) இப்பொழுது சொல்லப்போவதைக்கேட்டால் இன்னும் குழப்பமாக இருக்கும்! ஆக்டோபஸ்களுக்கு கண்கள் ஷார்ப். ஆனால், வண்ணங்கள் சுத்தமாக தெரியாது. எவ்வாறு சரியான வண்ணத்திற்கு தன்னை மாற்றிக்கொள்கின்றன? (விஞ்ஞானிகளின் சமீபகால அனுமானம் : ஆக்டோபஸ்களின் மேற்தோல்கள் “பார்க்கின்றன”!!)

உருமாறும் ஏலியன்கள் :

Color மற்றும் Pattern Changing-ல் கட்டில் ஃபிஷ், ஒரு ராஜா!! நம்ம வீட்டு வேலியோர பச்சோந்தியெல்லாம் இவற்றுக்குப்பிறகுதான்..   




கோழி ஓடுவதுமாதிரி இரண்டு கால்களால் உருமாறி ஓடிஒளிந்துகொள்ளும் ஒரு வீடியோ :

மேலும் பல வீடியோக்கள் :


கட்டில்ஃபிஷ்-களின் காதல் காலம்(HD) - தற்காப்பு, இணையை கவர்தல், இரையை பிடித்தல் ஆகியபோது மட்டுமில்லாமல் காரணகாரியமின்றி சாதாரண காலங்களில் உற்சாகமாக இருக்கும்போதும் உடல் வண்ணம் மாறுகிறது..
http://www.youtube.com/watch?v=v8Aw7QroV78&feature=relmfu


இவை ஏலியன்களா ??? : 3 இதயங்கள், 9 மூளைகள், 8 கைகள் !!!
http://www.youtube.com/watch?v=xAL0R5MbzdQ&feature=related

Maze -ல் ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் இரையை சுலப வழிகளில் கண்டறிவது - நுண்ணறிவு சோதனை
http://www.youtube.com/watch?v=bBe2KaRuI80&feature=fvsr

ஒரு கட்டில்ஃபிஷ், சிறிய ஆக்டோபஸ் ஒன்றினை லபக்குகின்றது:
http://www.youtube.com/watch?v=mGMT99i00M4

- ooOoo - ooOoo - ooOoo - ooOoo - ooOoo -

இது என்ன படம்ங்க ???!!!

ரு படம் என்னவென்று தெரியவில்லை. நண்பர் சொன்ன கதையைக்கேட்டவுடன் அந்தப்படத்தைப்பார்க்கவோ,  அதனைப்பற்றித்தெரிந்துகொள்ளவோ ஆவல் :

’சிறுவனாக இருந்த வயதில் வீட்டைவிட்டு ஓடிப்போகிறான் ஒருத்தன்.  கடுமையாக உழைக்கிறான். எக்கச்சக்க பணம் சேர்க்கிறது. பல வருடங்களுக்குப்பிறகு, அவ்வளவு பணத்தையும் எடுத்துக்கொண்டு தன் சொந்த ஊருக்கு திரும்புகிறான். தன் வீட்டினரிடம் தான் இன்னார் என வெளிப்படுத்திக்கொள்ளாமல், விருந்தாளி போல தங்குகின்றான். விடிந்ததும் ’தான் யார்’ என்று சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுப்பதுதான் அவன் பிளான். விருந்தாளியாக வந்தவனிடம் ஏகப்பட்ட பணம் இருப்பது அந்த வீட்டிலிருப்பவர்களுக்கு தெரியவருகிறது.. பணத்திற்கு ஆசைப்பட்டு இரவோடு இரவாக அவனை கொலைசெய்துவிடுகிறார்கள் !!! படம் முடிகின்றது..’

- ooOoo - ooOoo - ooOoo - ooOoo - ooOoo -

சினிமா - என்ன?ஏன்?எப்படி? (WWH)

* சந்தரமுகி படத்தில் ஜோதிகாவின் பிரச்சினை - ஆவியா? Split Personality-யா?

* தம்பி ராமையாவின் கஸ்டடியில் மைனாவை அனுப்பவதில்   என்ன பிரச்சினை? பிரச்சினை என்று தெரிந்தும் ஏன் இன்ஸ்பெக்டர் தன் வீட்டுக்கு கூட்டிப்போகவேண்டும்?

- ooOoo - ooOoo - ooOoo - ooOoo - ooOoo -

மேஸ்ட்ரோ - Is Back !!!



- ooOoo - ooOoo - ooOoo - ooOoo - ooOoo -

மீண்டும் சந்திப்போம் !!!

Saturday, April 7, 2012

எண்ணச்சிதறல்கள் ( 07-04-2012 சனி)

புது சர்ச்சை ??!!!


நன்றி : வீக்கிப்பீடியா
ல்கி அவர்களின் ’பொன்னியின் செல்வன்’ படித்தவர்களுக்கு தோன்றும் ஒரு பொதுவான கேள்வி - மாவீரனான ஆதித்யன் எவ்வாறு இறந்தான்? மதுரைக்கு சென்றிருந்தபோது துரோகிகளால் பாண்டிய ஆபத்துதவிகளால் கொலைசெய்யப்பட்டது போலத்தான் எழுதியிருப்பார் கல்கி! உண்மையில், சிற்றப்பா உத்தமசோழனின் அதிகாரிகள் தான் இளவரசன் ஆதித்யனை துரோகக்கொலை செய்தார்கள் என்கிறார் ஒரு பதிவர். ஏன் என்பதாக அவர் சொல்லும் எல்லாக்காரணங்களும் தீவிர ஆய்வுக்குரியவை!

ராஜராஜன் மன்னனாக முடிசூட்டிய காலத்திற்கு முன்னர் சுமார் முப்பதாண்டுகாலம் வரலாற்றுக்குறிப்புகள் குழப்பமாக, தெளிவாக இல்லை என்று கூறப்படுகின்றது(வீக்கி). சூழ்ச்சியால் ஆதித்யனின் மறைவு, சுந்தரச்சோழ மன்னர் காஞ்சிபுர அரண்மனையில் மாளிகைச்சிறை(?!) வைக்கப்பட்டது, உத்தமசோழன் பதவியேற்றுக்கொண்டது, சுந்தரசோழரின் மறைவு... இவற்றுக்குப்பிறகு என்ன ஆயிற்று என்பது தெளிவாக இல்லை. 

அந்த சமயங்களில்தான் நடந்ததாக பதிவர் சொல்ல வருவது - (1) ஆதித்யன் கொல்லப்பட்ட சில காலத்திலேயே வந்தியத்தேவனும் உத்தமசோழனின் படையினரால் கொல்லப்பட்டார். (Update: விவாதத்திற்குரிய பொருள்) (2) ஆதித்யன் மற்றும் சுந்தரசோழர் ஆகியோர் மறைவுக்குப்பின், ராஜராஜனும் அவரது அக்காள் குந்தவை நாச்சியாரும் உத்தமசோழனிடம் சிக்காமல் தலைமறைவு வாழ்க்கை வந்துள்ளார்கள்.(3) குந்தவை வேறொரு மதத்திற்கு மாறியதாக கூறப்படுவது.

குந்தவை நாச்சியார், தான் சார்ந்திருந்த சமயத்தை புறந்தள்ளி வேறொரு சமயத்திற்கு மாறி ’சமயபுர’ட்சி செய்த இடம்மாம் - சமயபுரம் ! ஒரு சமயத்திலிருந்து மற்றொரு சமயத்திற்கு மாறினார் என்று சொல்லியே ஏகப்பட்ட எதிர்ப்புகளை சம்பாதித்துக்கொண்டிருக்கிறார் இந்தப்பதிவர்!!!

இவர் விடுக்கும் தகவல்கள் எந்தளவுக்கு உண்மைத்தன்மை வாய்ந்தது என்பதனை யாராவது நடுநிலைமையான தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்தினால் நல்லது.

அதே போல, கல்கியின் பொ.செல்வனிலும் - கண்ணை மூடிக்கொண்டு நம்பாதே! நந்தினியும் ஆழ்வார்க்கடியானும் மட்டும் கற்பனையல்ல.. கதைச்சம்பவங்கள் யாவும் கற்பனையோ என்று எண்ணத்தோன்றுகிறது...

இதனால் படித்த, பார்த்த மற்றும் கேட்டவைகளோடு, கற்ற விஷயங்களும்(!) ஆய்வுக்குரியதாகின்றன..

* * * * * * * * * * * * * *

என் கார்ட்டூன் பக்கம்

ன் டெலிபோன் இண்டர்வியூ வேண்டாம்?



* * * * * * * * * * * * * *

கார்ட்டூன் என்னது! ஆனா ஜோக் என்னதில்ல!!



டாக்டர்: ஆபரேஷன் முடிஞ்சதும் காலாட்டிக்கிட்டே தூங்குங்க.. இல்லைன்னா, மார்ச்சுவரிக்கு கொண்டுபோயிடுவாங்க!

பேஷண்ட் : ???!!!!

* * * * * * * * * * * * * *

மேகமே மேகமே - காப்பியா? 


ந்துஸ்தானி பாடகர் அமரர் ஜெகஜித் என்பவரின் பாடல் இன்ஸ்பிரேஷன் தான் - மேகமே மேகமே! சங்கர்-கணேஷ் அவர்களின் இசையில் வாணி ஜெயராம் அவர்களின் மயக்கும் குரலில் வந்த மேகமே மேகமே கீழே -


சந்தரசேகரிடம் ”எனக்கொரு மலர் மாலை நீ வாங்கவேண்டும்” என்று பாடியபடி திரும்பும்போது, நீங்கள் ஒரு மகிழ்ச்சியை புன்னகையாக வெளிப்படுத்தவேண்டும் என்று டைரக்டர் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். அதற்கு அவர் என்ன செய்கிறார் என்று பாருங்கள் :))

* * * * * * * * * * * * * *

உலகின் பெரிய ஊஞ்சல்



* * * * * * * * * * * * * *

இந்த வார - வீடியோ சர்ஃபிங்:


வற்றில் ஒரு பாடல், கெளதமின் - நீதானே எந்தன் பொன்வசந்தந்தத்திற்கு, இசைஞானிதான் இசை என்று அறிவிக்கப்பட்டதும் ஒரு எதிர்ப்பார்ப்புடன் பார்த்தது.  இந்தப்பாடல்களை எல்லாம் யூட்யூபில் தேடியபோது கிடைத்த மற்றொரு அருமையான பாடல் தான் கடைசிப்பாடல். அந்தக்கால கேத்ரினா கைஃப் - ஆன, ரதியின்  உதட்டசைவுகள் வேடிக்கையாக இருக்கும்.

[பாடவந்ததோர் கானம்] - [இசை மேடையில்] - [நீதானே என் பொன்வசந்தம்] - [ஆயிரம் மலர்களே மலருங்கள்]

* * * * * * * * * * * * * *

யார் இவர்?

தேசத்தந்தையுடன் இருக்கும் இந்த வெள்ளைக்கார தாத்தா யார் என்று தெரிகிறதா??


சார்லி சாப்ளின்!!
 
காந்தியடிகள் 1931-ஆம் ஆண்டில் பிரிட்டன் சென்றிருந்தபோது ஏற்பட்ட சந்திப்பு!

* * * * * * * * * * * * * *

மீண்டும் பார்க்கலாம் !!!

இன்னிசை அளபெடை சினிமாவிலா ?

கே ப்டன்   விஜயகாந்த் அவர்கள் தோன்றும் திரைப்பாடல்களில், ' இன்னிசை அளபெடை '-யை எளிதாகக்காணலாம் ( இன்னிசை அளபெடை  என்பது செய்யுளை இனி...