Friday, September 25, 2009

சந்திரனில் தண்ணீர் Vs நிலா Real Estate.

சந்திரனில் தண்ணீர் கண்டுபிடித்ததை வைத்து ஏகப்பட்ட பரபரப்பு செய்திகள் நாளிதழ்களையும், வலைப்பக்கங்களையும் நிரப்புகின்றன.. ’விண் ஆராய்ச்சி, வீண் செலவு’ என்ற நிலைமைமாறி, இன்னும் உற்சாகமாக இயங்குகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்..

விடுவார்களா துட்டு பார்ட்டிகள்?? இப்பொழுதே இடம் வாங்கிப்போடுகிறார்கள் நிலாவில் !!! ஒரு ஏக்கருக்கு $20 மட்டுமாம்!!! அமெரிக்காவில் இயங்கும் Lunar Embassy கடந்த 29 வருடங்களாக நிலவில் நிலம் விற்கிறார்களாம். மேலும் தகவல்களுக்கு, www.moonshop.com போங்க (ஆதாரம் - The Times of India - 30 Sep 2009)

இவர்கள் எல்லாம் ஒன்றை கவனிக்கவேண்டும்...

திரு. மாதவன் நாயர் அவர்களின் கூற்றுப்படி

‘சந்திரனில் தண்ணீர், தண்ணீர் வடிவத்தில் கிடையாது.. மற்ற கனிமங்களுடன் கலந்து தாதுப்பொருளாக உள்ளது.. குறிப்பாக, ஹைட்ராக்ஸிலுடன் சேர்ந்துதான் தண்ணீர் சந்திரனின் நிலத்தில் காணப்படுகின்றது..

சந்திராயன் 1 அனுப்பிய படங்களை பார்த்தால், துருவப்பகுதிகளில் மட்டும் தண்ணீர் படிமங்கள் இருப்பதாகத்தெரிகின்றது..

Chandrayan-1 NASA Lunar Water Picture

எதிர்காலத்தில் பூமியில் ஏற்படப்போகும் தண்ணீர் பற்றாக்குறை, வாகன எரிபொருள்(Hydrogen) ஆகியவற்றுக்கு backup ஆக சந்திரன் படிமங்களை பயன்படுத்திக்கொள்ளமுடியும்..’

காற்றுமண்டலம், பிராணவாயு இல்லாத இடத்தில் தண்ணீர் எப்படி வந்தது? சூரிய ஒளிதான் மூலகாரணம். சந்திரனின் நிலப்பரப்பில் பட்டு தண்ணீர் மூலக்கூறுகள் தோன்றுகின்றன.. தொடர்ந்து, அங்கே தண்ணீர் படிமங்கள் இருந்து கொண்டிருக்கக்காரணமும் அதுவே..

மற்றபடி,வாழ்வதற்கான எந்தவொரு அடிப்படையும் இல்லாத (அல்லது லாயக்கில்லாத) இடம் நிலா! ஆம்ஸ்ட்ராங் நிலவிற்கு போனதே இன்னும் சர்ச்சையாகயிருக்கின்ற நேரத்தில், அங்கேயே வாழப்போவதற்கான முயற்சிகள் சில கேள்விகளை எழுப்புகின்றன..

முக்கியமாக, பிராணவாயு இல்லாமல் வாழ மனிதன் என்று பரிணாமமாற்றம் பெறுகின்றானோ அன்றுதான் நிலாவில் வாழ்வது சாத்தியமாகும்.

மனிதகுலத்தில், மின்சாரம் முக்கியக்கண்டுபிடிப்பு. பூமிக்கு இருப்பதுபோல, ஈர்ப்பு விசை நிலவில் இல்லாததால், வேகம் முதலான விசை கிடையாது.. அதனால், மின் தயாரிப்பு கடினமானதாக இருக்கும்.. மின் பாட்டரிகளையும் மாற்றாக பயன்படுத்துவது, பெரிய அளவில் இயலாதது..

ஒரு சிறிய கிராம (Lunar Village) அளவில் உருவாக்கவே கடுமையான முயற்சிகளும் கண்டுபிடிப்புகளும் தேவைப்படும்..

அதுவரை நிலா, ”தெரியாத புதையல்” தான். அதுசரி.. விஞ்ஞானிகள் இதை பற்றியெல்லாம் சிந்திக்காமலா இருப்பார்கள்?

புவியிலேயே வாழத்தகுதியற்ற இடங்களாக துருவப்பகுதிகள் மாறிவருகிறது.. அதை மேம்படுத்த வழியிருக்கிறதா?? பூமிப்பரப்பில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டால், கடல் பரப்பிலோ, கடலடியிலோ வீடுகட்டி வாழ்வது போல ஏதாவது கண்டுபிடித்தால் தேவலை !!!

மேலும் கருத்துக்களை இங்கே தரவும்.

Image Source Courtesy: NASA

Thursday, August 20, 2009

பேய்க்கதை (யார் பேய் கண்டுபிடியுங்கள்)

அந்த பூங்காவில் மனித நடமாட்டம் குறைவாக இருந்தது..

அந்த கடுமையான வெயிலுக்கும் குளுமையாக இருந்த புங்கை மரத்தடியிலிருந்த ஒரு சிமெண்ட் பெஞ்சில்.. ஒரு ஆணும், பெண்ணும் அமர்ந்திருந்தார்கள்

Photobucket

”என்னாச்சு ரமேஷ்.. வீட்டுக்கு போனீங்களா?” என்று கேட்டாள் பெண். ரமேஷ் மறுத்தலாக தலையாட்டினான்..

”ஹும்..எல்லாம் முடிஞ்சிடுச்சு.. அங்க போய் என்னாகப்போகுது,கவிதா.. உங்களுக்கு என்னாச்சு..”

ஒரு மெல்லிய தென்றல் காற்று அவள் தலைமுடியை கலைத்து சென்றது..

“எனக்கும் அதேதான், ரமேஷ்.. அவங்க மூஞ்சியிலேயே முழிக்கப்பிடிக்கல.. இங்கேயேதான் இருந்தேன்.. “

அருகில் இருந்த சிமெண்ட் பெஞ்சிற்கு ஒரு ஜோடி வந்தது.. நெருக்கமாக அமர்ந்து பேச ஆரம்பித்தார்கள்..

ரமேஷ் குலுங்கி குலுங்கி அழுதான்.. கவிதா தேற்ற முயன்றாள்.. “ப்ளீஸ்.. கண்ட்ரோல் யுவர்செல்ஃப்..” அவள் கண்களிலும் நீர்..

”ஹெல்லோ பிள்ளைங்களா.. எப்படி இருக்கீங்க?” என்று உற்சாகக்குரல் கேட்டு இருவரும் நிமிர்ந்தார்கள்..

ரங்கநாதன் தாத்தாவும், அவர் மனைவியும் வந்துகொண்டிருந்தார்கள்..

”ஏன் கண்ணீர்? ஓ.. பழசெல்லாம் ஞாபகம் வந்துடுச்சா.. “ என்றவாறு அருகில் வந்தார்கள்..

”ம்..விடுங்கப்பா.. நான், இவ எல்லாம் வயசானவங்க.. உடம்பு சரியில்லாமதான் இருந்தோம்.. ஆனா, எங்களோட ஒப்பிட்டு பார்க்கையில உங்க ரெண்டுபேரு நிலைமையும் ரொம்ப மோசம்-னு இவதான் அடிக்கடி சொல்லிக்கிட்டிருப்பா.. கவலைப்படாதீங்க கண்ணுங்களா.. எல்லாத்தையும் மேல இருந்து ஒருத்தன் பார்த்துக்கிட்டிருக்கான்.. ” என்றபடி கடந்து சென்றார்..

* * * * *
ஒரு அழைப்பு..

கூட்டுமுயற்சியில் உருவான விக்கிப்பீடியா களஞ்சியத்தொகுப்பு மற்றும், “And, now.." போல, எத்தனையோ collaborative writing பிரபலமடைகிறது.

அதேபோல, இந்தக்கதையை இன்னும் வளர்க்கப்பிடித்தால், மேலும் எழுத வேண்டுகிறேன்.. அதாவது, collaborative story writing - க்கு அழைப்பு விடுக்கின்றேன்..
அதாவது, குழுவாக இணைந்து, ஒரு கதையை எழுதலாம். ஒரு சின்ன முயற்சிதான்..

மறவாமல் இந்தக்கதைக்கு லின்க் கொடுத்துவிடவும்..
நன்றி..


* * * * *

Friday, August 14, 2009

Crowdsourcing - ஆன்லைனில் சம்பாதிங்க - ஆர்வகுழுக்கள் !!!

எதிர்காலத்தில், டாக்டர், வக்கீல், ஆடிட்டர்கள் போல, கணினி வல்லுனர்களும் தனியாகவோ (அல்லது குழுவாகவோ) ஒரு அறை மட்டுமே எடுத்து, 'இங்கு ஆர்டரின் பேரில் தரமான மென்பொருள் செய்து தருகிறோம்' என போர்டு போட்டுக்கொண்டு, பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பணிபுரிவதற்கான காலம் வரும்..

காரணம் - Crowdsourcing !!!

சமீபகாலமாக, இணையத்தில் மெல்ல மெல்ல பரவலாக பாவிக்கப்படும் இந்த உத்திதான், எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளில் மாற்றம் ஏற்படுத்தப்போகும் விஷயமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது..

Crowdsourcing - அப்படீன்னா என்ன?

ஒரு கம்பெனிக்கோ, ஒரு தனிமனிதருக்கோ ஒரு வேலை/பணி செய்யவேண்டியதிருக்கிறது. என்ன செய்வார்? காசிருந்தால் outsource செய்வார்.. ஆனால், 'செய்யவேண்டிய பணி, பெரிய பணி... அதற்கு நிறைய பேர் வேண்டும், சிறந்த தரத்துடன் வெளியீடுகள்(solutions) வேண்டும்' என்று தோணினால், crowdsource செய்வார்..

அதாவது, பொது ஊடகங்களில், இந்த பணி(problem/task) பற்றி தண்டோரா போட்டு அறிவித்துவிடுவார்.. சிறு சிறு குழுக்களாக தங்களை அறிவித்துக்கொள்கிற மென்பொருள் நிபுணர்கள் அல்லது டிசைனர்கள், தங்களுக்கு ஆர்வமுள்ள சில பணிகளை எடுத்துசெய்து தீர்வுகள்(solutions) காண்பார்கள்.. எத்தனை தீர்வுகள் வருகி்ன்றதோ, அத்தனையும், பிற்பாடு Task அறிவித்தவருக்கே சொந்தமாகிறது.. அவர் அதை அப்படியே பயன்படுத்திகொள்ளலாம்.. மாற்றமும் செய்யலாம்.. (இன்னாருடைய தீர்வை பயன்படுத்துகிறோம் என்று சொல்லிவிடுவார்கள்) பின் ஒரு திட்ட மேலாளர் போல செயல்பட்டு ஒருங்கிணைப்பார்கள்...

பெரும்பாலான சமயங்களில், பணியை எடுத்து செய்பவர்களுக்கு முழுவிவரங்களும் தெரிய வாய்ப்பில்லாமல் போவதுண்டு .. உதாரணத்திற்கு, 10000 சென்ட்கள் [#12]. சுமாராக, 5 மாதத்தில், 51 நாடுகளிலிருந்து, 10000 ஓவியர்கள் ஒரு ஒரு புள்ளி மட்டுமே வைத்து வரைந்த ஓவியம். வரைந்து முடித்துபின் மேலாளர் ஒருங்கிணைத்து அறிவித்தபின்னரே தாங்கள் இதற்காகத்தான் பணிபுரிந்திருக்கிறோம் என்று அவர்களுக்கு தெரியவந்தது..

பணி எடுத்து செய்பவர்களுக்கு என்ன($) தருவார்கள்???

பெரும்பாலானவர்கள் இந்த பணிக்கு இவ்வளவு தருவோம் என்று சொல்லிவிடுவார்கள்.. இதற்காக சில தளங்களும் உண்டு.. (தகவல் சற்று கீழே). பணிக்கு ஊதியமாக, பணம் தராமல், சான்றிதழ்கள், அன்பளிப்புகள் தரலாம்.. இன்னும் சிலர், "தங்களுடைய விடா முயற்சியையும் தன்னம்பிக்கையையும் பாராட்டி எங்கள் கம்பெனி அளிக்கக்கூடிய ஒரு அதிசயப்பொருள் இந்த சோப்பு டப்பா" - என்ற அதிர்ச்சியையும் தருவார்கள்.. இணையத்தில் இவ்வாறான 'சோப்பு டப்பா அன்பளிப்பு' கம்பெனிகள் நிறைய இருக்கிறார்கள் என்பது தெரிந்த செய்திதான்!!! ஆனாலும், இந்த (வெறும்) பாராட்டுக்களையும்கூட தங்களுடைய ரெஸியூமில் அள்ளிப்போட்டுக்கொண்டு போகிறவர்களும் இருக்கிறார்கள்..அது அவர்களுடைய Career Development-ற்கு உதவக்கூடுமாம்..

வீக்கிப்பீடியா போன்ற தகவல் களஞ்சியங்கள்,கூகிள் எர்த், ஆன்லைன் குழுமங்கள், forum-கள், ப்ளாக்குகள்,யூ-ட்யூப், ட்விட்டர், லொட்டு லொசுக்கு..ஏன் ஒரு விளையாட்டு[#11] கூட உள்ளது.. இப்படி எல்லாமே crowdsourcing-ன் சாயல்களே... என்ன, இவற்றுக்கெல்லாம் பைசா கிடையாது.. தபால்தலை சேகரிப்பவர்கள், காசுக்காகவா செய்கிறார்கள்.. அதுபோலத்தான் இதுவும்!

காசு தரக்கூடிய வலைதளங்களும் உண்டு.. உதாரணத்திற்கு, குரு[#1], 99டிசைன்ஸ்[#2], இன்னொசென்டிவ்[#3], எம்-டர்க்[#4], ஆகியன..

அழகழகாக டீசர்ட் டிசைன் செய்து அல்லது பஞ்ச் வாசகங்கள் பதித்து சம்பாதிக்க ஆசையா.. (சினிமா பஞ்ச் கூடவே கூடாது) இப்படிப்பட்டவர்களுக்கானதுதான் இந்த த்ரெட்லெஸ்[#5]. நல்ல டிசைன்கள், வாசகங்களுக்கு வாக்களித்தாலும் பரிசுகள் உண்டு.. இங்கே முக்கியப்பணிகள் எல்லாவற்றையும் open call-ல் அறிவிக்கிறார்கள்.. (New Update:டீ-சர்ட் டிசைன் பற்றி கற்றுகொள்வதற்கான தளங்களின் விவரங்கள் கீழே [#14])

நிறுவனங்கள், அமைப்புகள்,(நம்மூரில் கழகங்கள், குழந்தைகள் போல) ஆகியவற்றுக்கு நல்ல நல்ல பெயர்களை வைக்கவும், சிறந்தவற்றுக்கு வாக்களிக்கவும் அழைப்பு விடப்படுகின்றது.. [#7]. பெயர்சூட்டலுக்கும், வாக்களிப்புக்கும் பரிசு.

Crowdsourcing - ஒரு வரப்பிரசாதமா??

குழப்பம்தரும் கேள்வி.. சின்னச்சின்ன பணிகளுக்கு, தரமான தீர்வுகளை வேண்டும் என நினைக்கும் சிறு நிறுவனங்களுக்கு, இது வரப்பிரசாதம்தான்..

பெரும் வர்த்தகப்பணிகளை பிரித்துத்தருவது மற்றும் ரகசியம் காக்கப்படவேண்டிய(confidential) பணிகள் ஆகியவைகளை crowdsource பண்ணுவது உசிதமல்ல.. Outsourcing-கில், ஒப்படைத்த பணி தாமதமானால், 'ஏய்யா லேட்டு?' என்று கேட்கலாம்.. Crowdsourcing-கில், அது முடியாது.. அவர்களாக பார்த்து முடித்துத்தந்தால்தான் ஆச்சு.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் தருவார்கள்.. முடிக்காமல் விடவும் சாத்தியம் அதிகம்..ஏனெனில்,இங்கே சேவை கால ஒப்பந்தம்(SLA) கிடையாது..

இன்னொருபக்கம், பணியை எடுத்துக்கொண்டு சன்மானம் தராமல் ஏமாற்றுகிற ஆன்லைன் நிறுவனங்கள் அதிகம் இருப்பதை இதன் பிரபலத்திற்கு பின்னடைவாக கருதலாம்..


பணிகள் பற்றிய அறிவிப்புகள் இந்த தளங்களில்:

1) குரு
2) 99டிசைன்ஸ்
3) இன்னோசென்டிவ்
4) எம்-டர்க்
5) டீசர்ட் டிசைனிங்,டீசர்ட்டில் வாசகங்கள், வாக்களிப்புகளுக்கு பரிசுகள்
6) என் ஐடியா
7) பேரு வக்ய எங்களுக்கு உதவுங்கள்

மேலும் படிங்க இங்கே,

8) வேறு சில பணிவாய்ப்புகள்
9) 135 சிறு தொழில்களின் தொகுப்பு(சி.தொ. வடிவமாகவே, crowdsourcing பார்க்கப்படுகிறது...கண்டிப்பாக வாசிக்கவேண்டிய ஒன்று)
10) பணி அறிவிக்கும் ப்ளாக்
11) Game with a purposeக்கு, ஒரு நல்ல உதாரணம்
12) 10000 சென்ட்கள்
13) எங்களுக்கு ஐடியா சொல்லுங்க
14) டீ-சர்ட் டிசைன் கற்றுகொள்ள (New Update)

ஆதாரம்:
* அவுட்சோர்ஸிங் அவ்ளோதானா?!!
* வீக்கிப்பீடியா
* பத்தாயிரம் சென்ட்கள்
* தி ஹிண்டு.
* ஆனந்த விகடன்.
* * * * * * * * * * * *

இன்றைய ஆச்சர்யம்: சேலத்தில், விபத்தில் சிக்கி, கோமாவிலிருந்த ஒரு சிறுபிள்ளையை, சுயநினைவுக்கு மீட்டெடுக்க உதவியாக இருந்தது - வடிவேலுவின் காமெடிக்காட்சிகளே! (நன்றி: குமுதம்)

Sunday, July 26, 2009

"ச்சூச்சூ" - மறு சுழற்சியில் - "ஆஹா"

தலைப்பை பார்த்தவுடன், பள்ளிக்கூட அறிவியல் கண்காட்சி ஞாபகத்துக்கு வந்தால், நான் பொருப்பில்லை.. :)

ஆனால், "fill up one tank and empty another. US chemists have combined refuelling your car and relieving yourself by creating a new catalyst that can extract hydrogen from urine.." (#முழு தகவலும் இங்கே) என்று குறும்போடு சொல்லும்போது, என்ன சொல்லவருகிறார்கள் என வாசிக்கத்தோன்றியது..

ஆமாம். மனிதனின் சிறுநீரிலிருந்து, எதிர்காலத்தில் ஹைட்ரஜன் கார்களுக்கு, எரிபொருள் தயாரிக்கமுடியும் என சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்..

எப்படி..??!!!

சாதாரணமாக, ஹைட்ரஜன் கார்களுக்குத் தேவையான ஹைட்ரஜன் அணுக்களை நீரிலிருந்து பிரித்தெடுக்கிறார்கள். சாதாரண நீரின் ஒவ்வொரு மூலக்கூறிலும் இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் என்று பள்ளிக்கூட பாடத்தில் படித்திருப்போம்.. அதை கொஞ்சம் சிரமப்பட்டுதான் பிரித்து எடுக்கிறார்கள்.. ஏனெனில், ஹைட்ரஜன் அணுக்கள், நீரின் மூலக்கூறுகளில் இருகிய பிணைப்புடன்(tightly bonded) இடம்பெற்றுள்ளது..

இதற்கு நேர்மாறாக, யூரியா மூலக்கூறுகளில், நான்கு ஹை. அணுக்கள் சற்று இலகிய பிணைப்புடன்(less tightly bonded) இடம்பெற்றுள்ளது.. அதனால், பிரித்து எடுப்பதும் சுலபம்..

நீரின் மூலக்கூறிலிருந்து இரண்டு ஹை. அணுக்களை பெயர்க்கத்தேவையான மின்னளவு 1.23V என்றால், யுரியாவின் மூலக்கூறிலிருந்து நான்கு ஹை. அணுக்களை பெயர்க்கத்தேவையான மின்அளவு 0.3V மட்டுமே.. அதுவும் விலைகுறைந்த நிக்கல் எலக்ட்ரோடுகளின் உதவியால் ரொம்ப எளிதாக பிரித்தெடுக்கமுடியும் என்று இதனை தொடர்ந்து ஆராய்ச்சி செய்கிற Botte சொல்கிறார்..

தவிர, எக்கச்சக்கமாக 'வீணாக்கப்படுகிற' சிறுநீர், எரிபொருளாக பயன்படுமாயின், செலவுகள் கட்டுப்படுவதுடன், சுற்றுப்புறமும் சுத்தமாகும் இல்லையா... ???

ம்ம்ம்... கெமிஸ்ட்ரி வேலை செய்யுது-னு இதைத்தான் சொல்கிறார்களோ.. ???

ஆதாரம்:
http://www.physorg.com/news165836803.html
The Times of India - Sunday நாளிதழ்.

Sunday, July 19, 2009

WiziQ - இண்டர்நெட் ட்யூஷன்.

WiZiQ - அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்டிருக்கிற இந்த தளம், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாகும்..

ஆமாம்.. இந்த தளத்தின் முகப்பில், இரண்டு பகுதிகள். ஒன்று - ஆசிரியர்கள் தேடுவதற்கு. மற்றொன்று - மாணவர்கள் தேடுவதற்கு.

எந்த பாடப்பகுதியில் சேரவேண்டுமோ, அதை குறிப்பிட்டால், அதற்கான ஆசிரியர்களின் தகவல்கள் தரப்படுகிறது. இதேபோல,ஆசிரியர்களுக்கும் தான் கற்பிக்கிற பாடங்களை கற்க விரும்பும் மாணவர்களை தேடுவதற்கான optionம் தரப்பட்டுள்ளது..

ஆசிரியர்கள் வெவ்வேறான கற்பித்தல் முறையை பின்பற்ற வழி செய்திருக்கிறார்கள்.. உதாரணத்திற்கு, விர்ச்சுவல் க்ளாஸ்ரூம், ஆகியன.. அதோடு, மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு வைத்து, திருத்தி மதிப்பி்டும் options-ம் வைத்து, நிஜ வகுப்பறையைப்போலவே உருவாக்க வழிவகுக்கிறார்கள்..

பாட சம்பந்தமான கோப்புகளை இந்த தளம் மூலமாகவே பகிர்ந்துகொள்ளலாம் என்பது நன்று.

இலவசமாகவும், கட்டண சேவையாகவும் உள்ள இந்த தளம், தற்பொழுது beta வில் உள்ளது..

இதுதான் அந்தத்தளம் - http://www.wiziq.com

போய்த்தான் பாருங்க...

Sunday, March 8, 2009

காகித ப்ரொஜெக்ட்கள் !!!

நமது நாட்டில் மட்டும் சுமார் 18 மெகா ப்ரொஜெக்ட்கள், இன்னும் காகித அளவிலேயே உள்ளது என்பது தெரியுமா ??

இந்த திட்டங்கள் நிறைவேறினால் மட்டும், 1,64,000 பேருக்கு நேரடியான வேலைவாய்ப்பும், 2,70,000 பேருக்கு மறைமுகமான வேலைவாய்ப்பும் கிட்டும் என்பது தெரியுமா?

ஆம், கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக(2003) வெறும் ஒப்பந்தம் வடிவிலோ, MoU மாதிரியோ இருக்கும் இந்த திட்டங்களினால் நாம் இழந்தது, 3 லட்சம் அளவினாலான வேலைவாய்ப்புக்களை.

ஏன் இந்த தாமதம்???

இந்த காலதாமதம், இடம் ஒதுக்குதல் நடைமுறைகளால் ஏற்படுகிறது என்று சொல்கிறார்கள்..

'போஸ்கோ' எனும் இரும்பு கம்பெனி மட்டும், இந்தியாவில் வெறும்(!!!) ரூ.176 கோடி முதலிட்டால், சுமார் 35,730 பேருக்கு வேலை கிடைக்கும்.

சென்னையிலும் ஜேவி என்ற நிறுவனம் ரூ.4000 கோடி முதலீடு செய்தால், சுமார் 5000 பேருக்கு வேலை கிடைக்கும்..

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான விப்ரோ, இன்ஃபியும் 750 கோடி ரூபாய் முதலீடு செய்யின், சுமார் 10,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்று மென்மேலும் புகையை கிளப்புகிறார்கள்..!!!

சூழ்நிலையை மேலும் புகைமண்டலமாக்க(!!!), இங்கே க்ளிக்கவும்..

இந்த ப்ராஜெக்ட் எல்லாம் நிஜத்திற்கு வர, கடவுளையும், அந்தந்த மாநில அரசுகளையும் வேண்டிகொள்வோம்...

Saturday, March 7, 2009

காரணம் ஆயிரம்...

வணக்கம்...

காரணம் ஆயிரம்...

"கோடாதி கோடி லட்சாப லட்ச
பிளாக்குகள்
ஏற்கனவே இருக்கின்றனவே..

இதில் நான் மட்டும்
என்ன புதிதாய்
சொல்லபோகிறேன்... "

என்று தோன்றும்தானே..

காரணம் அது ஒன்றுதான்...(ஆயிரமில்லை !!!)

நான் கற்றுக்கொண்டதை
உலகிற்கு தெரியப்படுத்த
முனையும் ஒரு
குழந்தையின்
விருப்பம்போல
இருப்பதுதான்...

மீண்டும் சந்திப்போம்...!!

:)

இன்னிசை அளபெடை சினிமாவிலா ?

கே ப்டன்   விஜயகாந்த் அவர்கள் தோன்றும் திரைப்பாடல்களில், ' இன்னிசை அளபெடை '-யை எளிதாகக்காணலாம் ( இன்னிசை அளபெடை  என்பது செய்யுளை இனி...