Saturday, April 7, 2012

எண்ணச்சிதறல்கள் ( 07-04-2012 சனி)

புது சர்ச்சை ??!!!


நன்றி : வீக்கிப்பீடியா
ல்கி அவர்களின் ’பொன்னியின் செல்வன்’ படித்தவர்களுக்கு தோன்றும் ஒரு பொதுவான கேள்வி - மாவீரனான ஆதித்யன் எவ்வாறு இறந்தான்? மதுரைக்கு சென்றிருந்தபோது துரோகிகளால் பாண்டிய ஆபத்துதவிகளால் கொலைசெய்யப்பட்டது போலத்தான் எழுதியிருப்பார் கல்கி! உண்மையில், சிற்றப்பா உத்தமசோழனின் அதிகாரிகள் தான் இளவரசன் ஆதித்யனை துரோகக்கொலை செய்தார்கள் என்கிறார் ஒரு பதிவர். ஏன் என்பதாக அவர் சொல்லும் எல்லாக்காரணங்களும் தீவிர ஆய்வுக்குரியவை!

ராஜராஜன் மன்னனாக முடிசூட்டிய காலத்திற்கு முன்னர் சுமார் முப்பதாண்டுகாலம் வரலாற்றுக்குறிப்புகள் குழப்பமாக, தெளிவாக இல்லை என்று கூறப்படுகின்றது(வீக்கி). சூழ்ச்சியால் ஆதித்யனின் மறைவு, சுந்தரச்சோழ மன்னர் காஞ்சிபுர அரண்மனையில் மாளிகைச்சிறை(?!) வைக்கப்பட்டது, உத்தமசோழன் பதவியேற்றுக்கொண்டது, சுந்தரசோழரின் மறைவு... இவற்றுக்குப்பிறகு என்ன ஆயிற்று என்பது தெளிவாக இல்லை. 

அந்த சமயங்களில்தான் நடந்ததாக பதிவர் சொல்ல வருவது - (1) ஆதித்யன் கொல்லப்பட்ட சில காலத்திலேயே வந்தியத்தேவனும் உத்தமசோழனின் படையினரால் கொல்லப்பட்டார். (Update: விவாதத்திற்குரிய பொருள்) (2) ஆதித்யன் மற்றும் சுந்தரசோழர் ஆகியோர் மறைவுக்குப்பின், ராஜராஜனும் அவரது அக்காள் குந்தவை நாச்சியாரும் உத்தமசோழனிடம் சிக்காமல் தலைமறைவு வாழ்க்கை வந்துள்ளார்கள்.(3) குந்தவை வேறொரு மதத்திற்கு மாறியதாக கூறப்படுவது.

குந்தவை நாச்சியார், தான் சார்ந்திருந்த சமயத்தை புறந்தள்ளி வேறொரு சமயத்திற்கு மாறி ’சமயபுர’ட்சி செய்த இடம்மாம் - சமயபுரம் ! ஒரு சமயத்திலிருந்து மற்றொரு சமயத்திற்கு மாறினார் என்று சொல்லியே ஏகப்பட்ட எதிர்ப்புகளை சம்பாதித்துக்கொண்டிருக்கிறார் இந்தப்பதிவர்!!!

இவர் விடுக்கும் தகவல்கள் எந்தளவுக்கு உண்மைத்தன்மை வாய்ந்தது என்பதனை யாராவது நடுநிலைமையான தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்தினால் நல்லது.

அதே போல, கல்கியின் பொ.செல்வனிலும் - கண்ணை மூடிக்கொண்டு நம்பாதே! நந்தினியும் ஆழ்வார்க்கடியானும் மட்டும் கற்பனையல்ல.. கதைச்சம்பவங்கள் யாவும் கற்பனையோ என்று எண்ணத்தோன்றுகிறது...

இதனால் படித்த, பார்த்த மற்றும் கேட்டவைகளோடு, கற்ற விஷயங்களும்(!) ஆய்வுக்குரியதாகின்றன..

* * * * * * * * * * * * * *

என் கார்ட்டூன் பக்கம்

ன் டெலிபோன் இண்டர்வியூ வேண்டாம்?



* * * * * * * * * * * * * *

கார்ட்டூன் என்னது! ஆனா ஜோக் என்னதில்ல!!



டாக்டர்: ஆபரேஷன் முடிஞ்சதும் காலாட்டிக்கிட்டே தூங்குங்க.. இல்லைன்னா, மார்ச்சுவரிக்கு கொண்டுபோயிடுவாங்க!

பேஷண்ட் : ???!!!!

* * * * * * * * * * * * * *

மேகமே மேகமே - காப்பியா? 


ந்துஸ்தானி பாடகர் அமரர் ஜெகஜித் என்பவரின் பாடல் இன்ஸ்பிரேஷன் தான் - மேகமே மேகமே! சங்கர்-கணேஷ் அவர்களின் இசையில் வாணி ஜெயராம் அவர்களின் மயக்கும் குரலில் வந்த மேகமே மேகமே கீழே -


சந்தரசேகரிடம் ”எனக்கொரு மலர் மாலை நீ வாங்கவேண்டும்” என்று பாடியபடி திரும்பும்போது, நீங்கள் ஒரு மகிழ்ச்சியை புன்னகையாக வெளிப்படுத்தவேண்டும் என்று டைரக்டர் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். அதற்கு அவர் என்ன செய்கிறார் என்று பாருங்கள் :))

* * * * * * * * * * * * * *

உலகின் பெரிய ஊஞ்சல்



* * * * * * * * * * * * * *

இந்த வார - வீடியோ சர்ஃபிங்:


வற்றில் ஒரு பாடல், கெளதமின் - நீதானே எந்தன் பொன்வசந்தந்தத்திற்கு, இசைஞானிதான் இசை என்று அறிவிக்கப்பட்டதும் ஒரு எதிர்ப்பார்ப்புடன் பார்த்தது.  இந்தப்பாடல்களை எல்லாம் யூட்யூபில் தேடியபோது கிடைத்த மற்றொரு அருமையான பாடல் தான் கடைசிப்பாடல். அந்தக்கால கேத்ரினா கைஃப் - ஆன, ரதியின்  உதட்டசைவுகள் வேடிக்கையாக இருக்கும்.

[பாடவந்ததோர் கானம்] - [இசை மேடையில்] - [நீதானே என் பொன்வசந்தம்] - [ஆயிரம் மலர்களே மலருங்கள்]

* * * * * * * * * * * * * *

யார் இவர்?

தேசத்தந்தையுடன் இருக்கும் இந்த வெள்ளைக்கார தாத்தா யார் என்று தெரிகிறதா??


சார்லி சாப்ளின்!!
 
காந்தியடிகள் 1931-ஆம் ஆண்டில் பிரிட்டன் சென்றிருந்தபோது ஏற்பட்ட சந்திப்பு!

* * * * * * * * * * * * * *

மீண்டும் பார்க்கலாம் !!!

இன்னிசை அளபெடை சினிமாவிலா ?

கே ப்டன்   விஜயகாந்த் அவர்கள் தோன்றும் திரைப்பாடல்களில், ' இன்னிசை அளபெடை '-யை எளிதாகக்காணலாம் ( இன்னிசை அளபெடை  என்பது செய்யுளை இனி...