Saturday, November 28, 2009

இல்லாதவங்க இருந்தா என்ன, இல்லாட்டி தான் என்ன...


கெமிஸ்ட்ரியே இல்லாத பொருள்


”கெமிஸ்ட்ரியே இல்லாத பொருள் உலகத்துல எது அத்தான்? எங்க மாஸ்டர் கேட்டார்.. எங்க யாருக்கும் தெரியல” என்றாள் பத்தாம் வகுப்புக்கு போகும் கஸின்...





”ஒருவேளை, கலா மாஸ்டர் சுந்தரம் மாஸ்டர்-லாம் கெமிஸ்ட்ரியே இல்லை கெமிஸ்ட்ரியே இல்லை-ங்கிறாங்கில்லையா.  அதாயிருக்குமோனு சொன்னேன்.ஆனா அதுவும் இல்லையாம். அதான் உங்களை கேட்கச்சொன்னேன்..” என்றாள் என் மனைவியும்.


”கெமிஸ்ட்ரி இல்லாத பொருள் எதுவுமேயில்லை” என்றேன். அதேமாதிரி, பிஸிக்ஸ் இல்லாத பொருளும் உலகத்தில் இல்லை. ஒரு கல் சும்மா அசையாமல் இருத்தலும் ஒரு இயக்கமே எனறு படித்திருக்கிறோம் இல்லையா.

_________________________________________________________________________________


கொசு, கோழி, ஆடு - ஆவி ????


தெரியாமல்தான் கேட்கிறேன்.. மனிதனுக்கு மட்டும்தான் ஆவியா? மற்ற உயிரினங்களுக்குக்கிடையாதா? தினம் தினம் நூற்றுக்கணக்கில் கொசுக்களை கொன்று குவிக்கின்றோம்.. அதன் ஆன்மாவெல்லாம் உடனேவுடனே அமைதியாகிவிடுகின்றதா?


சிக்கன் மட்டனெல்லாம் ஒரு புடி புடிக்கிறோமே... அவற்றின் ஆவி எல்லாம் கசாப்புக்கடைக்காரனை ஒன்றும் செய்வதில்லையா..


சும்மா சும்மா யோசித்தால் இப்படியெல்லாம் தோன்றுகிறது.. விவரம் தெரிந்தவர்கள் விளக்கினால் உபயோகமாக இருக்கும்..



ரொம்பநாட்களுக்குமுன் படித்த சிறுகதை(கதை: சுஜாதா ??) ஞாபகம் வருகிறது.. 


ஒரு பெண் திருமணமாகி புகுந்தவீடு போகிறாள். அவளோடு அந்த வீட்டில் வளர்ந்த வெள்ளைக்குதிரையும் சீதனமாக அனுப்பப்படுகிறது.. ஏதோ ஒரு கோபத்தில், அந்தக்குதிரையை கொன்றுவிட்டு, வேறு ஒரு பழுப்புக்குதிரை வாங்கிக்கொள்கிறான் கணவன். செத்த குதிரையின் ஆவி, இந்தப்பெண்ணுக்குள் புகுந்துகொள்ள பேசும்போதெல்லாம்,  அசாதாரணமாக குதிரைகணைப்புகளும் அவளிடமிருந்து வருகிறது.. புதிய ப்ழுப்புக்குதிரைக்கும் திடீரென கால்கள் வெள்ளையாக மாறிக்கொண்டேயிருக்கின்றது..


எதனால் இப்படி என்று பார்த்தால், அந்தபொல்லாத கணவனுக்கு கள்ளக்காதலிகள் தொடர்புண்டு. தன் எஜமானிக்கு துரோகம் செய்கிறானே என்ற கோபத்தில், பழைய குதிரை அந்தமாதிரி இடங்களுக்கு வர அடம்பிடித்ததால் அதனை கொன்றிருக்கின்றான். புதிய குதிரையும் தான் போகக்கூடாத இடங்களுக்கெல்லாம் போவதற்கு வருந்தியதால், அதன் கால்கள் வெள்ளையாக மாறியது..


இறுதியில், இவளுக்கு கணைப்பு அதிகமாகி உணவில் விஷம் வைத்து கணவனை கொல்வதாக கதை முடியும்.

_________________________________________________________________________________


”இல்லாதவங்க இருந்தா என்ன, இல்லாட்டி தான் என்ன...”


இந்தியன் படத்தில் வரும் ஒரு வசனம் இது.  ஏழைகளின் உயிர் எவ்வளவு சாதாரணமாக போய்விட்டிருக்கிறது பாருங்கள்? மனதை பாதித்த வசனம் இது.




_________________________________________________________________________________


 ஒரு புதிர்


3 லி. அளவு குவளை ஒன்றும், 5 லி. குவளை ஒன்றும் உங்களுக்கு தரப்படுகிறது. இவற்றை மட்டும் பயன்படுத்தி, சரியாக 4 லிட்டர் தண்ணீர் எடுக்கவேண்டும்.. வேறெந்த குவளையும் கிடையாது.. எப்படி??

_______________________________________________________________________________

Tuesday, November 17, 2009

தழுவாத கனவுகள்.. (ஒரு சிறிய கவிதை முயற்சி)

Inside a room with man on the opened door photo

ஓசையின்றி
நகர்கின்ற
நிகழ்கால
வாழ்க்கையை,
நனவாய் மாற
அடம்பிடிக்கும்
லட்சியங்களின்
முனகலுக்கிடையே,
இரவின்
தனிமையில்
யோசித்துப்பார்த்தால்,
நிசப்தத்தின்
சப்தம்
காதை அடைக்கிறது...

--o0o0o--

தேடுபொறிகள் (Search Engines) - இனி மெல்ல சாகும்... ????!!!!

'என்னது ??
நிஜமாவா...
பல்லுவெளக்காம கூட இருந்திருவேன்..
கூகிள்லாம இல்லாம, எப்படி கோடடிக்கிறதாம் ???'

--o0o--

ஆமாம்... புதிய கண்டுபிடிப்புகள் எளிமையாகயும், வசதியாகவும் இருந்துவிட்டால், பழையது மறக்கப்படுகிறது.. இது தொழில்நுட்பத்திற்கும் பொருந்தும்..

இடைக்காலத்தில், அறிமுகமான தேடுபொறிகள், நிஜமாகவே பொறி பறக்கச்செய்தன.. Clustering (வகைப்படுத்துதல்) , Semantic (பொருளுணர்ந்த தேடல்) ஆகிய தொழில்நுட்ப முயற்சிகள் இன்னும் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன...

எத்தனை மேம்படுத்தினாலும், இந்த தேடுபொறிகள், ஏட்டுச்சுரக்காய்கள் போலத்தான் இருக்கின்றன... தகுந்த சீட்டை எடுத்துத்தந்து, 'நெல்' வாங்கிக்கொள்ளும் கிளிப்பிள்ளையைப்போல..

நிஜ வாழ்வில் எழுகிற எல்லா கேள்விகளுக்கும் விடைதரும் அளவிற்கு தேடுபொறிகள் முன்னேற்றமடையவில்லை என்பதுதான் பொதுவான கருத்து..

ஒரு உதாரணம்..

தன் வருங்கால மனைவிக்கு முகூர்த்தப்பட்டு வாங்க விரும்பிய ஒருத்தர், தேடுபொறிகளில் திரும்பதிரும்ப தேடி சோர்ந்து போய், ட்விட்டரில், 'பட்டு வாங்கவேண்டும்..' என்று ட்விட்டி (tweet) விடுகிறார்.. அவரை பின்தொடர்ந்த நன்மக்களிடமிருந்து, பல்வேறு ஆலோசனைகள்.. வழக்கம்போல 'தி.நகர் போங்கள்', 'ஈரோடு போங்கள்','காஞ்சி போங்கள்' இப்படி..

மற்றொரு பின் தொடரும் நண்பர், "பெரிய காஞ்சியின் சில இடங்களில், அசல் பட்டு குறைந்த விலையில் கிடைக்கிறது..என்னை அணுகுங்களேன்" என்று சரியாலோசனை சொல்கிறார்.. அவரை அணுகிய இவருக்கு சகாய விலையில் ஒரிஜினல் பட்டு வாங்க சாத்தியமாகிறது..



இதைப்போல, பிற மனிதர்களின் (அனுபவத்) தகவல்கள் தான் நமது அன்றாட வாழ்க்கையில் உதவுகிறது என்பதால், சமூக இணைப்புத்தளங்கள்(Social Networking Sites), தேடுபொறிகளைவிட மென்மேலும் பிரபலமடையும் என கணிக்கப்படுகின்றன..

அதுமட்டுமின்றி, நமது கைப்பேசி ஒன்றே போதும் இதுபோன்ற தளங்களில் எப்பொழுதும் இணைந்திருக்க..!!! இதுவும் இத்தளங்கள் பிரபலமடைய முக்கிய காரணமாகின்றது..

ஆனால்...

கவனம், இம்மாதிரி தளங்களில் சுயதகவல்களை சொல்லாமல் இருப்பதும், தமது செயல்பாடுகளை வெளிப்படுத்தாமல் (உதா. ஊருக்குப்போறேன்,ரெண்டு நாளாகும், சாவியை ஜன்னலில்தான் வைத்திருப்பேன் ) இருப்பதும் உத்தமம்.. அதுவே குற்றங்களுக்கு வழிவகுக்காமல், தொழில்நுட்பத்தின் முழுப்பயனைடைய உதவும்.

பின்செய்தி:

நிறப்போர்...டிசைனர்கள் உஷார்:

'நிறவெறி'க்கான போர் இல்லைங்க.. சாதாரணமான 'நிற'த்திற்கான(Color) போர்தான் !!! எதிர்காலத்தில், கம்ப்யூட்டர் டிசைனர்கள் எல்லா நிறங்களையும் நினைத்தவுடனே பயன்படுத்தமுடியாது.. அவர்கள் பயன்படுத்த ஆசைப்படும் டிசைன்களில் வண்ணங்களை புகுத்தினால், காப்புரிமை பிரச்சனை பாயும்.. உதாரணத்திற்கு, ஆரஞ்சு வண்ணத்தை Orange என்ற செல்போன் சேவை நிறுவனம், காப்புரிமை பெற்றுவைத்திருக்கிறார்கள்.. இதேபோல, அடர்சிகப்பு - Coca Cola, மெஜெண்டா - T Mobile, இப்படி.. ( மேலும் படிக்க, இக்கடச்சூடு)

இன்னிசை அளபெடை சினிமாவிலா ?

கே ப்டன்   விஜயகாந்த் அவர்கள் தோன்றும் திரைப்பாடல்களில், ' இன்னிசை அளபெடை '-யை எளிதாகக்காணலாம் ( இன்னிசை அளபெடை  என்பது செய்யுளை இனி...